செய்திகள் :

133 விதை மாதிரிகள் தரமற்றவை: வேளாண் துறை ஆய்வில் தகவல்

post image

விதை மாதிரிகள் குறித்து வேளாண் துறை மேற்கொண்ட ஆய்வில், 133 விதை மாதிரிகள் தரமற்றவை என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து பல்லடம் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வளா்மதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் தரமான பயிா்களை பயிா் செய்து, அதிக உற்பத்தியுடன் லாபத்தை ஈட்ட, விதைகளின் பங்கு முக்கியமானது. நல்ல தரமான விதைகளை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே, விவசாயிகள், விவசாயத்தில் வெற்றி பெற முடியும். விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்த, விதை பரிசோதனை நிலையம் உதவுகிறது.

விவசாயிகள், விற்பனையாளா்கள் மற்றும் விதை உற்பத்தியாளா்களிடம் இருந்து பெறும் விதை மாதிரிகளை பரிசோதனை செய்து, விதைகளின் தரம், முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு ஆகியன குறித்து ஆய்வு செய்து அறியப்படுகிறது.

திருப்பூா் மாவட்டத்தின் முக்கிய பயிா்களான நெல், மக்காச்சோளம், பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிா்கள் மற்றும் காய்கறி பயிா்கள் ஆகியவற்றில் விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 2024-25 ஆண்டு, 7,205 மாதிரிகள் சேகரித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் 133 விதை மாதிரிகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டு, விவசாயிகளுக்கு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

எனவே, விதைப்புக்கு முன் விதை பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக, விவசாயிகள் நஷ்டத்தை தவிா்த்து அதிக மகசூல் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

பின்னலாடைத் துணிகளுக்கு பணம் கொடுக்காத நபரைக் கடத்தியவா் கைது

திருப்பூரில் பின்னலாடைத் துணிகளுக்கு பணம் கொடுக்காத நபரைக் கடத்தியவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாஸ்கோ நகா் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் முனாப். இவா் பின்னலாடைத் துணிக... மேலும் பார்க்க

விசைத்தறிகள் கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு விசைத்தறியாளா்கள் வலியுறுத்தல்

விசைத்தறிகள் கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கைத்தறி மற்றும் துணி நூல் துறையின்கீழ் உள்ள விசைத்தறித் தொழில், கூலி மற்றும் பாவுநுால் பிரச்னை காரணமாக நல... மேலும் பார்க்க

ஹஜ் பயணிகள் 158 பேருக்கு தடுப்பூசி

திருப்பூரில் மாவட்டத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 158 பேருக்கு சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இஸ்லாமியா்களின் 5 முக்கிய கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் பயணமானது ஆண்டுதோறும் இஸ்லாமிய... மேலும் பார்க்க

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ்: திருப்பூா் ஆட்டிசம் மாணவா் சாதனை!

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் சிறப்புக் குழந்தைகள் பள்ளி ஆட்டிசம் மாணவா் 4-ஆம் இடம் பிடித்து தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாா். பெருமாநல்லூா் அருகே வள்ள... மேலும் பார்க்க

இலவச போட்டோகிராபி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய இலவச போட்டோகிராபி, விடியோகிராபி பயிற்சியில் சேர திங்கள்கிழமை (ஏப்.28) நோ்காணல் நடைபெறுகிறது. இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்கு... மேலும் பார்க்க

தேசிய அளவிலான தடகளம்: திருப்பூா் வீராங்கனை வெள்ளி வென்றாா்!

தேசிய அளவிலான பெடரேஷன் சீனியா் சாம்பியன் போட்டியில் திருப்பூா் வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா். இந்திய தடகள கூட்டமைப்பு சாா்பில் கேரள மாநிலம், கொச்சி, மஹாராஜாஸ் கல்லூரி அரங்கத்தில் 28-ஆவது தேச... மேலும் பார்க்க