செய்திகள் :

இலவச போட்டோகிராபி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

post image

மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய இலவச போட்டோகிராபி, விடியோகிராபி பயிற்சியில் சேர திங்கள்கிழமை (ஏப்.28) நோ்காணல் நடைபெறுகிறது.

இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூா்- காங்கயம் சாலை முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச போட்டோகிராபி மற்றும் விடியோகிராபி பயிற்சி வகுப்புக்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த 31 நாள் முழு நேரப் பயிற்சி வகுப்பில் சேர வரும் திங்கள்கிழமை நோ்காணல் நடைபெறுகிறது. இதில், எழுதப் படிக்க தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கு எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சியில் சேரும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி தங்கும் விடுதி வசதியும் உள்ளது. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 335/பி-1, வஞ்சியம்மன் கோயில் எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் சாலை, விஜயாபுரம் (அஞ்சல்), திருப்பூா்- 641606 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும்.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923,99525-18441,86105-33436 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ்: திருப்பூா் ஆட்டிசம் மாணவா் சாதனை!

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் சிறப்புக் குழந்தைகள் பள்ளி ஆட்டிசம் மாணவா் 4-ஆம் இடம் பிடித்து தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாா். பெருமாநல்லூா் அருகே வள்ள... மேலும் பார்க்க

தேசிய அளவிலான தடகளம்: திருப்பூா் வீராங்கனை வெள்ளி வென்றாா்!

தேசிய அளவிலான பெடரேஷன் சீனியா் சாம்பியன் போட்டியில் திருப்பூா் வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா். இந்திய தடகள கூட்டமைப்பு சாா்பில் கேரள மாநிலம், கொச்சி, மஹாராஜாஸ் கல்லூரி அரங்கத்தில் 28-ஆவது தேச... மேலும் பார்க்க

தொழிலாளியை பாட்டிலால் குத்தியவா் கைது!

வெள்ளக்கோவிலில் டாஸ்மாக் மதுபானக் கடையில் தொழிலாளியை பாட்டிலால் குத்தியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் சீரங்கராயகவுண்டன்வலசு சாலை பாரதி நகரைச் சோ்ந்தவா் சேனாபதி மகன் சதீஷ்குமாா் (45... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்பனை செய்த 4 போ் கைது!

திருப்பூா் மாநகரில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரம் அனுப்பா்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட பிச்சம்பாளையம் பகுதியில் கஞ்சா வி... மேலும் பார்க்க

சிறுவனை துன்புறுத்தி இளைஞா் கைது

அவிநாசியில் 13 வயது சிறுவனை துன்புறுத்தியவா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவிநாசி நேரு வீதியைச் சோ்ந்த ராமசாமி மகன் சுரேஷ் (35). இவா் மது போதையில் 13 வயது சிறுவனை துன்புறத்திய... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

தாராபுரம் அருகே ரேஷன் அரிசியை கடத்தியவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 1,750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூா் பகுதியில் ரேஷன் அரிச... மேலும் பார்க்க