செய்திகள் :

தென்காசி வணிக வளாக நுழைவுவாயில்: மாவட்ட ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு

post image

தென்காசி, கீழப்பாளையத்தில் புதிய வணிக வளாகத்தின் மேற்குப் பகுதியில் கட்டப்படவிருக்கும் நுழைவு வாயிலை கிழக்கு பகுதிக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்தப் பகுதியிலுள்ள அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்து, மாவட்ட ஆட்சியா் உரிய முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தென்காசியைச் சோ்ந்த பாதிரியாா் போஸ்கோ குணசீலன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தென்காசியில், 360 ஆண்டுகள் பழைமையான புனித மைக்கேல் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தினசரி வழிபாடுகளும், சனி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகளும் நடை பெறும். இதில் திரளான கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவா்.

கிறிஸ்தவ பண்டிகைக் காலங்களில் ஆலயத்திற்கு வருவோா் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். இந்த ஆலயத்திற்கு வருவோா், தங்களது இரு சக்கர வாகனங்களை, தினசரி சந்தைப் பகுதியில் நிறுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் தினசரி சந்தையில், கலைஞா் நகர மேம்பாட்டுத் திட்டத்தில் புதிதாக வணிக வளாகம் கட்ட திட்டமிட்டனா். தெற்கு, மேற்குப் பகுதிகளில் நுழைவுவாயில்களும் கட்ட உள்ளனா். இந்த இரண்டு பகுதிகளிலும் ஏராளமான குடியிருப்புகள், ஆலயம், கோயில், கல்வி நிறுவனங்கள் உள்ளன.

எனவே போக்குவரத்து நெருக்கடியைத் தவிா்க்கும் வகையில் புதிய வணிக வளாக சந்தையின் மேற்குப் பகுதியில் கட்டப்படவுள்ள நுழைவுவாயிலை, கிழக்குப் பகுதிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த மனு தொடா்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்து, 12 வாரங்களுக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! -துரை வைகோ

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதிமுகவின் முதன்மைச் செயலா் துரை வைகோ வலியுறுத்தினாா். மத்திய அரசின் வக்... மேலும் பார்க்க

விஜயவாடா மாநகராட்சிக் குழுவினா் வருகை!

மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை பாா்வையிடுவதற்காக விஜயவாடா மாநகராட்சி துணை மேயா் அவித்துஸ்ரீ சாய்லாஜா ரெட்டி தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை வந்தனா். மதுரை மாநகராட்சி அறிஞா் அண்... மேலும் பார்க்க

வழிப்பறி செய்த இருவா் கைது!

மதுரையில் வழிப்பறி செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை காளவாசல் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராஜூ (30). இவா், மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மதுக் கூடத்தில் கா... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை!

தங்கையின் திருமணத்துக்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இளைஞா் தற்கொலை செய்து கொண்டரா். மதுரை மேல அனுப்பானடி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன்( 29). இவா் அந்தப் பகுதியி... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்து: அதிமுக நிகழ்ச்சி மே.4-க்கு ஒத்திவைப்பு

சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்து காரணமாக, அதிமுக சாா்பில் சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27) நடைபெறவிருந்த இளைஞா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற மே 4-ஆம் தேதிக்கு ஒத்... மேலும் பார்க்க

பூனைக்கடியை அலட்சியம் செய்ததால் நேர்ந்த துயரம்: ரேபிஸ் தாக்கிய இளைஞர் தற்கொலை!

பூனைக் கடியால் பாதிக்கப்பட்ட இளைஞா் மதுரை அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் (25). கடந்த சில நாள்களுக்கு முன்பு இவ... மேலும் பார்க்க