செய்திகள் :

மகாராஷ்டிரா: குறுகிய கால விசாவில் இருக்கும் 1000 பாகிஸ்தானியர்கள் வெளியேற பட்னாவிஸ் உத்தரவு

post image

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

இத்தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு ஈடுபட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதல்

அதில் குறுகிய கால விசாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனே நாட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் தங்களது நாட்டிற்கு செல்ல தயாராகி வருகின்றனர். மகாராஷ்டிராவில் மட்டும் மொத்தம் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அவர்களில் 1000 பேர் குறுகிய கால விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இன்றைக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மாநில அமைச்சர் யோகேஷ் கதம் அளித்த பேட்டியில், ''மகாராஷ்டிராவில் 4 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் நீண்ட கால விசாவில் வசிக்கின்றனர். ஆயிரம் பாகிஸ்தானியர்கள் மருத்துவம், தொழில், படப்பிடிப்பு போன்ற காரணங்களுக்காக குறுகிய கால விசாவில் வந்திருக்கின்றனர். அவர்கள் உடனே மகாராஷ்டிராவில் இருந்து காலி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவ விசாவில் வந்திருப்பவர்கள் மட்டும் தாமதமாக நாட்டை விட்டு வெளியேற அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது''என்றார்.

யோகேஷ் கதம்

இது குறித்து மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,''மகாராஷ்டிராவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை நாடு கடத்த தேவையான நடவடிக்கைகள் தொடங்கி விட்டது. காலக்கெடு முடிந்த பிறகு நாட்டில் தங்கி இருப்பவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

முன்னதாக காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த புனேயைச் சேர்ந்த இரண்டு பேர் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். காஷ்மீர் தாக்குதலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மட்டுமல்லாது நாடு முழுவதும் குறுகியகால விசாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் இன்றைக்குள் நாட்டை காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

கல்யாணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் - பின்னணி இதுதான்

இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் பல இதயங்கள் இணையும் விழாக்கள் நடந்துகொண்டிருக்க, பல வித்தியாசமான சம்பவங்களும் அரங்கேறுகின்றன. டெல்லியில் நடந்த திருமண நிகழ்வில் எதிர்பாராத திருப... மேலும் பார்க்க

``உயிரோடு இருக்கும் போதே எனக்கும், மனைவிக்கும் கட்டிய கல்லறை.." -ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் உருக்கம்

கர்நாடகாவில் ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் ஒருவர் தான் உயிரோடு இருக்கும்போதே தனக்கும், தனது மனைவிக்கும் கல்லறை கட்டியுள்ளார்.கர்நாடகா மாநிலத்தில் மைசூரு அருகில் இருக்கும் வலகெரே என்ற கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

Pahalgam Attack: "எங்கள் வீடியோவை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" - Viral Video தம்பதி சொல்வது என்ன?

ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் இந்தியாவையே கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. அங்கு நடந்ததாகக் கூறப்படும் ஒவ்வொரு சம்பவமும் பல்வேறு வகையில் மக்களிடம் பகிரப்படுகிறது.குறிப்பாக சுவிட்சர்லாந்து விசா மறுக்கப்... மேலும் பார்க்க

`டூரை முடித்துவிட்டு தான் வருவோம்’ - காஷ்மீரில் சுற்றுலாவை தொடரும் பயணிகள் - என்ன சொல்கிறார்கள்?

காஷ்மீரில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக தங... மேலும் பார்க்க

Pahalgam: ``3 வயதில் குழந்தை என்று கெஞ்சினார்.. விடாமல் சுட்டுக் கொன்றனர்'' - மனைவி கண்ணீர் பேட்டி

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதலில் தீவிரவாதிகள் பெண்களை விட்டுவிட்டு அவர்களுடன் வந்த ஆண்களை மட்டும் குறி வைத்து சுட்டுக்கொலை செய்தனர். நாடு ம... மேலும் பார்க்க

Mayonnaise: `மையோனைஸ்'க்கு தமிழக அரசு தடை! அந்தளவுக்குக் கெடுதலா அது? டயட்டீஷியன் விளக்கம்!

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மையோனைஸ் விருப்பமான உணவாகி விட்டது. க்ரில் சிக்கனையும், தந்தூரி சிக்கனையும் மையோனைஸில் தொட்டு ருசித்துக் கொண்டிருந்தவர்கள், தற்போது காய்கறித்துண்டுகள் வைக்கப்பட்... மேலும் பார்க்க