செய்திகள் :

செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா; மீண்டும் அமைச்சராகும்..! - அமைச்சரவை மாற்றங்கள் என்னென்ன?

post image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அமைச்சரவையில் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது திமுக.

செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகிய அமைச்சர்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள். அந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி சாட்சிகளை கலைக்கலாம், மிரட்டலாம் என நீதிமன்றத்தில் வாதிட்டது அமலாக்கத்துறை.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா, ஜாமீன் வேண்டுமா? என்பதை முடிவு செய்ய 28ம் தேதி வரை கெடு விதித்திருந்தது நீதிமன்றம். இந்த நிலையில் அவரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளது திமுக அரசு.

வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது திமுக.

பொன்முடியை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குரல்கொடுத்து வருகின்றன. ஏற்கெனவே பொன்முடிக்கு சொத்துகுவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொன்முடி
பொன்முடி

இந்த நிலையில் கட்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுகப்பட்டதால் அவரும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

DMK அமைச்சரவையில் மாற்றங்கள்

செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை இலாகா, போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கருக்கு கூடுதலாக வழங்கப்படவுள்ளது.

அவரது மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி கூடுதலாக கவனிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

பொன்முடி நிர்வகித்து வந்த வனத்துறை அமைச்சர் பதவி பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது..

முன்னதாக அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது. அவருக்கான இலாகா அறிவிக்கப்படவில்லை.

புதிய அமைச்சர் நாளை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.

`மராத்தியர்களுக்காக ஒன்று சேர இதுவே சரியான நேரம்’ - ராஜ் தாக்கரேயுடன் கூட்டணிக்கு வலைவீசும் உத்தவ்?

சிவசேனாவில் இருந்து ராஜ்தாக்கரே கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறி புதிய கட்சி ஆரம்பித்த பிறகு உத்தவ் தாக்கரேயுடனோ அல்லது சிவசேனாவுடனோ ராஜ்தாக்கரே எந்த வித தொடர்பும் வைத்துக்கொண்டதில்லை. பல முறை இரண்டு பேரை... மேலும் பார்க்க

விஜய் கோவை விசிட்; கூட்டம், குழப்பம் டு டார்கெட் கொங்கு - தவெக பூத் கமிட்டி கூட்ட ஸ்பாட் ரிப்போர்ட்!

தவெக மேற்கு மண்டலம் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாள்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக... மேலும் பார்க்க

விஜய் பயணித்த வாகன கதவு சேதம்; தொண்டர்கள் கொந்தளிப்பு - தவெக பூத் கமிட்டி கூட்ட அப்டேட்ஸ்

கோவையில் நடிகர் விஜய் பயணித்த கேரவன் கதவுகளை ரசிகர்கள் முண்டியடித்து நெருங்கும் முயற்சியில் சேதமானதால், தவெக பூத் கமிட்டி மாநாட்டுத் திடலுக்கு செல்ல மாற்று வாகனத்தை பயன்படுத்தியுள்ளனர்.கோவை வந்த விஜய்... மேலும் பார்க்க

Jammu kashmir: `சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஓர் நியாயமற்ற ஆவணம்’ - ஒமர் அப்துல்லா காட்டம்

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, 1960-ம் ஆண்டு போடப்பட்ட இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான சிந்து நதிநீர் ஒப்பத்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அ... மேலும் பார்க்க

Virginia Giuffre: இளவரசர் மீது பாலியல் வன்கொடுமை புகார் - குற்றச்சாட்டு கூறியப் பெண் விபரீத முடிவு

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்திய வர்ஜீனியா கியூஃப்ரே (Virginia Giuffre) என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்... மேலும் பார்க்க

சேலம் வெடி விபத்து: 'முறையானப் பாதுகாப்பு கொடுக்கப்படுவதில்லை' - திமுக அரசுக்கு எடப்பாடி கண்டனம்

சேலம் ஓமலூர் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோயில் திருவிழாவுக்காகப் பட்டாசுகள் எடுத்துச் செல்லப்பட்டபோது எதிர்பாராத விதமாக பாட்டாசு வெடித்துச் சிதறியதில் 4 பேர் உயிரிழந்துள்... மேலும் பார்க்க