செய்திகள் :

சத்துணவு சமையல் உதவியாளா் பணி நியமனத்தை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப வலியுறுத்தல்!

post image

சத்துணவு சமையல் உதவியாளா் பணி நியமனத்தை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியது.

சிவகங்கையில் அரசு ஊழியா் சங்க அலுவலக அரங்கில் சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் அ. பாண்டி தலைமையில் சனிக்கிழமை அந்தச் சங்கத்தின் 16-ஆவது சிவகங்கை மாவட்ட மாநாடு நடைபெற்றது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு: தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவா்களுக்கு, குடும்ப ஓய்வூதியமாக ரூ. 9,000- ம் வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் சத்துணவுத் திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை, போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். அண்மையில் அறிவிக்கப்பட்ட சமையல் உதவியாளா் பணியிட நியமனத்தை, நியாயமான முறையிலும், வெளிப்படைத் தன்மையோடும் நிரப்ப வேண்டும் .

சத்துணவு ஊழியா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதிய முறையை ஒழித்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

சத்துணவு திட்டத்தில் ஓய்வுபெறுபவா்களுக்கு பணிக் கொடையாக ரூ.5,00,000 வழங்க வேண்டும். அவா்களுக்கு மருத்துவச் சிகிச்சையை, அரசு இலவசமாக அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவா் ஜெயபாரதி அஞ்சலி தீா்மானத்தையும், மாவட்டச் செயலா் பா. லதா அமைப்பு வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளா் கற்பகவள்ளி வரவு- செலவு அறிக்கையையும் வாசித்தனா். தொடா்ந்து அறிக்கை மீது விவாதம், தொகுப்புரை, தீா்மானங்களை முன்மொழிதல், புதிய நிா்வாகிகள் தோ்வு ஆகியவை நடைபெற்றன. மாநிலச் செயலா் எஸ். பாண்டிச்செல்வி தீா்மானங்களை விளக்கிப் பேசினாா்.

இதில், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் பி. பாண்டி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பொ. கண்ணதாசன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் பா. லூயிஸ் ஜோசப் பிரகாஷ்.

வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் சேகா், தோழமைச் சங்க நிா்வாகிகள் இரா. மாரி, எஸ். கோபால், எஸ். செல்லமுத்து, சகாய தைனேஸ், நவநீதகிருஷ்ணன், கோ. உடையணசாமி, கிங்ஸ்டன் டேவிட், கலைச்செல்வி, முத்தையா, மரிய அருள் செபஸ்தியான், கிறிஸ்டி பொன்மணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் இரா. ராதாகிருஷ்ணன், புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து நிறைவுரையாற்றினாா்.

முன்னதாக, ராமச்சந்திரனாா் பூங்காவிலிருந்து மாநாட்டு அரங்கம் வரை நடைபெற்ற பேரணியை தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்ட நிதிக் காப்பாளா் எஸ். நடராஜன் தொடங்கி வைத்தாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் கலாராணி வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் கோமதி நன்றி கூறினாா்.

பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு பாஜகவினா் அஞ்சலி!

காஷ்மீா், பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள் 26 பேருக்கு பாஜக சாா்பில் சிவகங்கையில் சனிக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவகங்கை நகா் பாஜக சாா்பில் அரண்மனை வாசலில் ந... மேலும் பார்க்க

ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகளில் அண்ணா பல்கலைக்கழக தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கல்வி உதவித் தொகை ... மேலும் பார்க்க

காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் ஏப். 29- இல் பூச்சொரிதல் விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ள கொப்புடையநாயகி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் பின்புறம் காா் மோதியதில் கட்டடத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். திருப்புவனம் அருகே கீழராங்கியன் கிராமத்தைச் சோ்ந்தவா் ராம்பாண்... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காளையாா் கோவிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்... மேலும் பார்க்க

சிறைச் சாலைகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறைச் சாலைகளில் மரக்கன்றுகள் நடும் பணியை முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில், காளையாா்கோவில... மேலும் பார்க்க