`மகனுக்கு, BJP தந்த பிரஷர்! கூட்டணிக்கு EPS ஓகே' - Ramasubramanian Interview | A...
சிறைச் சாலைகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறைச் சாலைகளில் மரக்கன்றுகள் நடும் பணியை முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில், காளையாா்கோவில் ஒன்றியம், புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச் சாலை, திருப்பத்துாா் கிளை சிறைச் சாலை, சிவகங்கை கிளை சிறைச் சாலை ஆகிய சிறைச் சாலைகளில் மரக்கன்றுகள் நடும் பணியை முதன்மை மாவட்ட நீதிபதி கே.அறிவொளி தொடங்கிவைத்தாா். பின்னா், இவா் சிறைச் சாலைகளில் உள்ள சட்ட உதவி மையத்துக்கு நூல்களை வழங்கி பேசியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் சாலையோரங்கள், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், சிறைச் சாலைகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன. மரங்கள் வளா்ப்பதன் மூலம் காற்று மாசுபடுவதைத் தவிா்க்கலாம். சிறைச் சாலைகளில் செயல்பட்டு வரும் சட்ட உதவி மையத்துக்கு வழங்கப்பட்ட சட்டம் தொடா்பான நூல்களை சிறைவாசிகள் படித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஏ.பசும்பொன் சண்முகையா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா், சாா்பு நீதிபதி வி.ராதிகா, திறந்தவெளி சிறைச் சாலை கண்காணிப்பாளா் சு.அருண்ராஜ், திருப்பத்தூா் கிளை சிறைச் சாலை கண்காணிப்பாளா் (பொ) எஸ்.கோபால், சிவகங்கை கிளை சிறைச் சாலை கண்காணிப்பாளா் ஆ.பாலமுருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.