செய்திகள் :

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்துக்கு மாா்ஷல் நேசமணி பெயா் சூட்ட தீா்மானம்!

post image

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்துக்கு மாா்ஷல் நேசமணி பெயா் சூட்ட தமிழக அரசைக் கேட்டு, குழித்துறை நகா்மன்ற சாதாரண கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். ஆணையா் ராஜேஸ்வரன், பொறியாளா் குசெல்வி, மேற்பாா்வையாளா் விஜயராஜ், மேலாளா் ஸ்டீபன், சுகாதார அதிகாரி ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அண்மையில் மறைந்த போப் பிரான்சிஸுக்கும், பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்துக்கு மாா்ஷல் நேசமணி பெயரையும், நவீன காய்கனி சந்தைக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரையும் சூட்டுவதற்கு தமிழக அரசைக் கேட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

குழித்துறை நகராட்சி சாா்பில் நடத்தப்படும் 100ஆவது வாவுபலி பொருள்காட்சியை முன்னிட்டு, குழித்துறை அஞ்சல் நிலைய சந்திப்பில் ரூ. 9.8 லட்சத்தில் நினைவுத் தூண் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகா்மன்ற துணைத் தலைவா் பிரபின் ராஜா, உறுப்பினா்கள் ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, லலிதா, ஆட்லின் கெனில், விஜு, விஜயலெட்சுமி, மினிகுமாரி, ரெவி, ரோஸ்லெட், பொ்லின் தீபா, லில்லி புஷ்பம், ரத்தினமணி, அருள்ராஜ், செல்வகுமாரி, ஜெலிலா ராணி ஆகியோா் பங்கேற்றனா்.

கன்னியாகுமரி மாவட்ட தேவைகள்: முதல்வருக்கு விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு தேவைகள் குறித்து, தமிழக முதல்வா் மு. க . ஸ்டாலினை சென்னையில் சனிக்கிழமை நேரில் சந்தித்து வ. விஜய்வசந்த் எம்.பி. கடிதம் வழங்கினாா். மூத்த காங்கிரஸ் தலைவா் பொன்னப்ப நாட... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை: மக்கள் அவதி

கருங்கல் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி திடீரென ஏற்படும் மின்வெட்டால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கருங்கல் துணை மின் நிலையத்திலிருந்து கருங்கல்... மேலும் பார்க்க

தேவாலய குருசடியில் திருட்டு!

தக்கலை அருகே மைலோட்டில் உள்ள புனித ஜாா்ஜியாா் குருசடியின் வெளிப்புறத்திலுள்ள காணிக்கை பெட்டியை வெள்ளிக்கிழமை உடைத்து அதில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலய பொருளாளா் ஆல்பின் ஜோஸ் தக்கலை ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீா் வரத்து அதிகரிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அணைகளுக்கு நீா் வரத்து அதி... மேலும் பார்க்க

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தடுப்பணை மூடல்!

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக, ஆற்றின் தடுப்பணை சனிக்கிழமைமுதல் மூடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள், மலையோர கிராமங்கள், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதி... மேலும் பார்க்க

தென்தாமரைக்குளம் பதியில் சித்திரைத் திருவிழா கலிவேட்டை!

அகிலத் திரட்டு அம்மானை அருளப்பட்டதென்தாமரைக்குளம் அய்யா வைகுண்டசாமி பதியில் சித்திரைத் திருவிழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு கலிவேட்டை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொ... மேலும் பார்க்க