செய்திகள் :

சென்னை, கோவையில் நவீன வசதிகளுடன் விடுதிகள்: அமைச்சா் மதிவேந்தன் அறிவிப்பு

post image

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்காக சென்னை, கோவையில் நவீன வசதிகளுடன் விடுதிகள் கட்டப்படும் என்று பேரவையில் அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மானியக் கோரிக்கை மீது சனிக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

இறப்பிலும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் செயல்படுத்தப்பட்ட சமத்துவ மயான திட்டம் மேலும் வலுப்படுத்தப்படும். இதற்காக ரூ.8 கோடியில் எரிவாயு தகன மேடை, வாகனங்கள் மற்றும் பிரத்யேக செயலி வழங்கப்படும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கான சிறப்பு சட்டப் பயிற்சி வழங்கப்படும். வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளைத் திறம்பட கையாள நீதி, காவல், ஆதிதிராவிடா் நலன் ஆகிய துறைகளின் அதிகாரிகளுக்கு இந்தப் பயிற்சியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதிகள் கட்டப்படும் என்றாா் அவா்.

விஜய் வருகை: தவெகவினர் மீது வழக்கு!

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகையின்போது மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தவெக மாவட்டச் செயலாளர் சம்பத் உள... மேலும் பார்க்க

சீறிப் பாயும் காளைகள்: கோவையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியினை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தார். கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1397 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஏப். 27) காலை 3-வது நாளாக 107.76 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2-வது நாளாக வினாடிக்கு 1397 ... மேலும் பார்க்க

கோடை மழை! இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோடை வெய்யில் கொளுத்தும் நிலையில், இன்று(ஏப். 27) காலை 10 மணி வரை தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னிய... மேலும் பார்க்க

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயா்வு: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கான ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்: சட்டப் பேரவையில் ஆளுநா், அமைச்சரவை, சட்டப் ப... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் சூழல்: அவை முன்னவா் துரைமுருகன்

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அவை முன்னவா் துரைமுருகன் பேசினாா். பேரவையில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க