ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்! - திலக் வர...
ரூ.11 லட்சத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
ஆண்டுக்கு ரூ.11 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.01/25
பணி: Engineer(Civil)
காலியிடங்கள்: 40
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Engineer(Electrical)
காலியிடங்கள்: 80
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Engineer(IT)
காலியிடங்கள்: 4
தகுதி: பொறியியல் துறையில் ஐடி பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Engineer (Material)
காலியிடங்கள்: 10
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மெட்டீரியல் மேலாண்மை பாடத்தில் முதுகலை டிப்ளமோ அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Engineer(Mechanical)
காலியிடங்கள்: 15
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Executive(HR)
காலியிடங்கள்: 7
தகுதி: ஏதொவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மேலாண்மை, மனிதவள மேலாண்மை(எச்ஆர்), தொழிலக தொடர்பியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலை அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Executive(Finance)
காலியிடங்கள்: 26
தகுதி: சிஏ, சிஎம்ஏ பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
பொறியாளர் பணிகளுக்கு குறைந்தது 3 ஆண்டுகளும், எச்ஆர் பணிகளுக்கு 2 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.11,00,000 வழங்கப்படும்.
வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ngel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.5.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.