பெஹல்காம்: இஸ்லாமிய வாசகங்களை கூறக் கட்டாயப்படுத்திய பயங்கரவாதிகள்!
விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 28-க்கு ஒத்திவைப்பு!
புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஏப். 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் சி. விஜயபாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் ஆஜராகாத நிலையில், அவர் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆஜராகினர்.
இவ்வழக்கின் விசாரணையை வரும் ஏப். 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வி. வெங்கடேச பெருமாள் உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: 69% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும்: ராமதாஸ்