செய்திகள் :

Sleeping Prince: 20 ஆண்டுகளாகத் தூங்குகிறாரா சவுதி இளவரசர்? வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?

post image

Sleeping Prince என்று பரவலாக அறியப்படும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால்.

இவர் ராணுவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, 2005-ம் ஆண்டு ஒரு சாலை விபத்தைச் சந்தித்து கோமா நிலைக்குச் சென்றார்.

ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் மருத்துவ நகரில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இருபது வருடங்களாக வென்டிலேட்டர் உதவியுடன் வாழ்ந்துவரும் இளவரசருக்கு உணவு குழாய் மூலம் உணவளிக்கப்படுகிறது.

கோமாவில் இருக்கும் இளவரசர்
கோமாவில் இருக்கும் இளவரசர்

2019-ம் ஆண்டில், அவர் ஒரு விரலைத் தூக்குவது, தலையை அசைப்பது போன்ற சிறிய அறிகுறிகள் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த சைகைகள் அவர் முழு சுயநினைவுக்குத் திரும்புவதைக் குறிக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், அவருக்குச் சிகிச்சையை நிறுத்தி கருணைக் கொலை செய்வதற்கும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருக்கின்றனர்.

ஆனால், அவரது தந்தை இளவரசர் கலீத் பின் தலால் அல் சவுத், ``கடவுள் என் மகன் விபத்தில் இறக்க வேண்டும் என்று விரும்பியிருந்தால், இந்நேரம் அவர் கல்லறையிலிருந்திருப்பார்.

அவர் உயிரோடு இருக்கிறார் என்றால் கடவுள் அவரை வாழ வைக்கவே விரும்புகிறார். அவர் மீண்டு வருவார்" என நம்பிக்கையோடு தெரிவித்திருக்கிறார்.

கோமாவில் இருக்கும் இளவரசர்
கோமாவில் இருக்கும் இளவரசர்

இந்த நிலையில், தற்போதுவரை கோமாவில் இருக்கும் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலாலுக்கு கடந்த 18-ம் தேதி 36 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு 'தூங்கும் இளவரசர்' என்று அவரது புகைப்படங்கள் மீண்டும் வைரலாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``உயிரோட வீட்டுக்கு போயிடுவியா..'' - நீதிபதிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் மிரட்டல்

ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆறு வருடமாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இறுதிகட்ட விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர் தரப்... மேலும் பார்க்க

IAF: தாக்கப்பட்டாரா இந்திய விமானப் படை வீரர்? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் ஷிலாதித்ய போஸ் மீது பெங்களூரு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. கடந்த 18-ம் தேதி ஷிலாதித்யாவும் அவரது மனைவி மதுமிதாவும் விமான நிலையத்திற்கு செல்லும் போது, க... மேலும் பார்க்க

திருமணத்தில் `ஊதா கலர் டிரம்' கிப்ஃட்; `மீரட் கொலை' நினைவால் மணமகன் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் தனது காதலனோடு சேர்ந்து கடந்த மாதம் தன் கணவரை கொலை செய்தார். அதோடு கணவரின் உடலை பல துண்டுகளாக வெட்டி அதனை ஊதா கலர் டிரம்மில் வைத்து சிமெண்ட் போட்டு மூ... மேலும் பார்க்க

Samantha: `ஆண்கள் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டுச் செல்வது ஏன்?' - சமந்தா லைக் செய்த வீடியோ

சக்சஸ்வெர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோ 'டைரி ஆஃப் எ சிஇஓ' என்ற youtube பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியைப் பகிர்ந்துகொண்டது. அந்த வீடியோவில் 'ஆண்க... மேலும் பார்க்க

``தண்ணீர் பஞ்சத்தால் இளைஞர்களுக்கு திருமணம் நடப்பதில்லை.." - தண்ணீரை பூட்டி வைக்கும் கிராமத்தினர்

நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் தான் அதிக பட்ச வெயில் அடிக்கிறது. இதனால் மக்கள் கிலோ மீட்டர் கணக்கில் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: தன்னை அழைப்பதாக எண்ணி கையைத் தூக்கியவருக்கு ஆப்ரேஷன்; வைரலான சம்பவத்தில் நடந்தது என்ன?

தம் பெயரை அழைத்ததாக கருதி சும்மா கையைத் தூக்கியதற்காக கையில் ஆறு தையல் போட்டப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோடா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல சிறப்பு வசதிகளைக் ... மேலும் பார்க்க