செய்திகள் :

அமெரிக்க துணை அதிபரின் ஜெய்ப்பூர் மாளிகை வருகை ரத்து!

post image

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஜெய்ப்பூர் மாளிகை வருகையானது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஏப்.21 ஆம் தேதி இரவு ஜெய்ப்பூர் வந்தடைந்த அவர்கள் நேற்று (ஏப்.22) வரலாற்று சிறப்புமிக்க அமெர் கோட்டையைக்குச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (ஏப்.23) அவர்களை நேரில் சந்தித்து வரவேற்றார். பின்னர், ஆக்ராவிலுள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹாலை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக துணை அதிபர் வேன்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுற்றிப்பார்த்தனர்.

இந்நிலையில், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகர மாளிகைக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களினால் அவர்களது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் இதுவரையில் வழங்கப்படாத நிலையில் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலினால் இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

தற்போது, ஜெய்ப்பூரின் ராம்பார்க் ஓட்டலில் தங்கியுள்ள துணை அதிபர் வேன்ஸின் குடும்பம் நாளை காலை 6.30 மணியளவில் அமெரிக்காவுக்கு திரும்பவுள்ளனர்.

முன்னதாக, துணை அதிபர் வேன்ஸின் வருகை திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இன்று ஜெய்ப்பூர் மாளிகை மக்கள் பார்வைக்கு மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஜம்மு - காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு!

பெஹல்காம் தீவிரவாதிகளைப் பற்றிய தகவல்களுக்கு வெகுமதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகளைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெஹல்காமில் சுற்று... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு!

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தின் தாங்மார்க் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட... மேலும் பார்க்க

கல்லூரி விடுதியில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது!

ஒடிசாவில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கியோஞார் மாவட்டத்தின் தங்கரபதா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலந்தரா மாஹாந்தா (வயது 15). இவர் பத்தாம் வகுப்புப் பொது தேர்வில் தேர்ச்சிப்... மேலும் பார்க்க

புதிய போப்-ஐ தேர்ந்தெடுக்கும் குழுவில் 4 இந்தியர்கள்!

கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த போப்-ஐ தேர்ந்தெடுக்கும் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த 4 கார்டினல்கள் உள்ளனர். நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையி... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு ‘கான்க்ளேவ்’ படத்தின் பார்வையாளர்கள் அதிகரிப்பு!

போப் பிரான்சிஸ் மறைவால் ‘கான்க்ளேவ்’ திரைப்படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ், ஏப். 21 ஆம... மேலும் பார்க்க

துருக்கியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! அதிர்வில் சிக்கிய முக்கிய நகரம்?

துருக்கி நாட்டில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் முக்கிய பொருளாதார மற்றும் கலாச... மேலும் பார்க்க