செய்திகள் :

பெஹல்காம் தீவிரவாதிகளைப் பற்றிய தகவல்களுக்கு வெகுமதி அறிவிப்பு!

post image

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகளைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்.22) மதியம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவமானது கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலாகக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், தாக்குதல் நடைபெற்ற பெஹல்காம் அமைந்துள்ள ஆனந்த்நாக் மாவட்டத்தின் காவல் துறையினர், தீவிரவாதிகளைக் குறித்த தகவல்கள் வழங்குபவர்களுக்கு ரூ.20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சுற்றுலாப் பயணிகள் மீது கோழைத்தனமான தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்க அளிக்கப்படும் தகவலுக்கும் ரூ.20 லட்சம் வெகுமதியாக வழங்கப்படும் எனவும் தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் எனவும் பதிவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த மக்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் வரையப்பட்ட மூன்று தீவிரவாதிகளின் மாதிரி ஓவியங்களை காவல் துறையினர் இன்று காலை வெளியிட்டிருந்தனர்.

அந்த மூவரும் பாகிஸ்தான் நாட்டினர் என்றும் இந்தத் தாக்குதலுக்கு தடைசெய்யப்பட்ட லஷ்கர்-எ-தைபா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெஸிஸ்டன்ஸ் ஃப்ரொண்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அட்டாரி-வாகா எல்லை மூடல்; மத்திய அரசு அதிரடி உத்தரவு!

அமெரிக்க துணை அதிபரின் ஜெய்ப்பூர் மாளிகை வருகை ரத்து!

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஜெய்ப்பூர் மாளிகை வருகையானது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு!

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தின் தாங்மார்க் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட... மேலும் பார்க்க

கல்லூரி விடுதியில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது!

ஒடிசாவில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கியோஞார் மாவட்டத்தின் தங்கரபதா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலந்தரா மாஹாந்தா (வயது 15). இவர் பத்தாம் வகுப்புப் பொது தேர்வில் தேர்ச்சிப்... மேலும் பார்க்க

புதிய போப்-ஐ தேர்ந்தெடுக்கும் குழுவில் 4 இந்தியர்கள்!

கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த போப்-ஐ தேர்ந்தெடுக்கும் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த 4 கார்டினல்கள் உள்ளனர். நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையி... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு ‘கான்க்ளேவ்’ படத்தின் பார்வையாளர்கள் அதிகரிப்பு!

போப் பிரான்சிஸ் மறைவால் ‘கான்க்ளேவ்’ திரைப்படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ், ஏப். 21 ஆம... மேலும் பார்க்க

துருக்கியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! அதிர்வில் சிக்கிய முக்கிய நகரம்?

துருக்கி நாட்டில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் முக்கிய பொருளாதார மற்றும் கலாச... மேலும் பார்க்க