செய்திகள் :

ஜம்மு - காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு!

post image

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குல்காம் மாவட்டத்தின் தாங்மார்க் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு இன்று (ஏப்.23) ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால், அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையின்போது அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த செய்திகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

முன்னதாக, இன்று (ஏப்.23) காலை அம்மாநிலத்தின் பரமுல்லா மாவட்டத்திலுள்ள இந்திய எல்லைக்கோட்டின் வழியாக இந்தியாவினுள் ஊடுறுவ முயன்ற 2 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

மேலும், பெஹல்காம் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்.22) நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 28 பேர் (2 வெளிநாட்டினர்) பலியானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:கூடுதல் கண்காணிப்புக்கு உள்ளாகும் காஷ்மீர் மக்களை நினைத்தால்... ஆண்ட்ரியா வேதனை!

பெஹல்காம் தீவிரவாதிகளைப் பற்றிய தகவல்களுக்கு வெகுமதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகளைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெஹல்காமில் சுற்று... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபரின் ஜெய்ப்பூர் மாளிகை வருகை ரத்து!

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஜெய்ப்பூர் மாளிகை வருகையானது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக... மேலும் பார்க்க

கல்லூரி விடுதியில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது!

ஒடிசாவில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கியோஞார் மாவட்டத்தின் தங்கரபதா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலந்தரா மாஹாந்தா (வயது 15). இவர் பத்தாம் வகுப்புப் பொது தேர்வில் தேர்ச்சிப்... மேலும் பார்க்க

புதிய போப்-ஐ தேர்ந்தெடுக்கும் குழுவில் 4 இந்தியர்கள்!

கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த போப்-ஐ தேர்ந்தெடுக்கும் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த 4 கார்டினல்கள் உள்ளனர். நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையி... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு ‘கான்க்ளேவ்’ படத்தின் பார்வையாளர்கள் அதிகரிப்பு!

போப் பிரான்சிஸ் மறைவால் ‘கான்க்ளேவ்’ திரைப்படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ், ஏப். 21 ஆம... மேலும் பார்க்க

துருக்கியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! அதிர்வில் சிக்கிய முக்கிய நகரம்?

துருக்கி நாட்டில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் முக்கிய பொருளாதார மற்றும் கலாச... மேலும் பார்க்க