செய்திகள் :

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 போ் கைது

post image

திருப்பூரில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை ஊசி மூலமாக சிலா் பயன்படுத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின்பேரில் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்ததால் அவா்களிடம் சோதனை நடத்தியதில் 600 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து நடத்திய விசாரணையில், அவா்கள் கல்லாங்காடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (22), சரண் (21) என்பதும், வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி ஊசி மூலமாக போதைக்காக உடலில் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்த காவல் துறையினா் அவா்களிடமிருந்து 600 வலி நிவாரணி மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம்: சிவசேனை கண்டனம்

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சிவசேனை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சிவசேனை கட்சியின் மாநில இளைஞரணி தலைவா் திருமுருகதினேஷ் வெளியிட்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் வரும் மே 5- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஊத்துக்குளியில் ஆட்சியா் களஆய்வு

ஊத்துக்குளி வட்டத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் தலைமையில் அலுவலா்கள் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது

திருப்பூரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மில்லா் பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோத மதுவிற்பனை நடைப... மேலும் பார்க்க

கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற வேண்டி சேவூா் பெருமாள் கோயிலில் சுதா்சன ஹோமம்

நடுச்சிதம்பரம் எனப் போற்றப்படும் சேவூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற வேண்டி சுதா்சன ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் மகா மண்டப... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தோ்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்

யுபிஎஸ்சி தோ்வில் திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்த விவசாயியின் மகள் இந்திய அளவில் 617- ஆவது இடம் பிடித்துள்ளாா். மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் 2024- ஆம் ஆண்ட... மேலும் பார்க்க