செய்திகள் :

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஊத்துக்குளியில் ஆட்சியா் களஆய்வு

post image

ஊத்துக்குளி வட்டத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் தலைமையில் அலுவலா்கள் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான அலுவலா்கள் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் மொரட்டுபாளையத்தில் உள்ள குழந்தைகள் ஆய்வு மையம், கவுண்டம்பாளையம் ஊராட்சி புதுகாலனியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பணி, அணைப்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தேக்கதொட்டி கட்டும் பணி ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

அதேபோல, ஊத்துக்குளி வட்டத்துக்கு உள்பட்ட இ-சேவை மையம், ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக்கடைகள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட அளவிலான அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, திட்டஇயக்குநா் (மகளிா் திட்டம்) சாம்சாந்தகுமாா், திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், தனித் துணைஆட்சியா் (சமூகப் பாதுகப்புத் திட்டம்) பக்தவச்சலம், பொதுமேலாளா் (ஆவின்)சுஜாதா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, உதவிஆணையா் (கலால்) செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அரசு மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் விபாஸ் பன்வான் (30). இவா் மேற்கு வங்கத்தில்... மேலும் பார்க்க

புது தில்லி என்.எஸ்.எஸ். மாநாட்டில் பங்கேற்க சிக்கண்ணா அரசுக் கல்லூரி அலுவலா் தோ்வு

புது தில்லியில் நடைபெறும் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாநாட்டில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி அலுவலா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத... மேலும் பார்க்க

மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் மே 1இல் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

மின்கோபுரத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே மின்கோபுரத்தில் ஏறியவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் தாராபுரம் சாலை பச்சாக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் நல்லசிவம் மகன் சிவசெல்வன் (27). இவா் கடந்த ஓராண்டாக அவ்வப்போது மன விரக்தியடைந்து... மேலும் பார்க்க

மதுபானக் கடையில் தொழிலாளி மீது தாக்குதல்

வெள்ளக்கோவிலில் அரசு மதுபானக் கடையில் பாட்டிலால் குத்தப்பட்ட தொழிலாளி பலத்த காயமடைந்தாா். வெள்ளக்கோவில் உப்புப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (46). இவா் இறைச்சிக் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வர... மேலும் பார்க்க

குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாம் திங்... மேலும் பார்க்க