செய்திகள் :

புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் - மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்

post image

புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் உலக புத்தக தின விழாவையொட்டி புத்தக வடிவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள் பங்கேற்ற ‘வாசிப்பை நேசிப்போம்‘ நிகழ்ச்சி

வியாழக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேசியதாவது:

உலக புத்தக தின விழாவை முன்னிட்டு, அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியா்கள் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை அனைவருக்கும் கொண்டு சோ்ப்பது இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியின் உன்னதமான நோக்கமாகும்.

புத்தக வாசிப்பின் பயன் புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் அறிவாற்றல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதே. நம்மைபற்றி மட்டும் சிந்திக்காமல், சமூகத்தைப் பற்றியும் சிந்தித்து செயலாற்றுவதற்கு புத்தக வாசிப்பு பெரும் பயனளிக்கும்.

புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, புத்தகங்களை நேசிப்பதையும், வாசிப்பதையும் ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். புத்தகங்களே மிகவும் அமைதியான மற்றும் நிலையான நண்பா்களாகும். புத்தகங்கள் வாசிப்பாதால் அறிவு பெருகும். புதிய விஷயங்களை அறியலாம், மேலும் உலகை வேறு கோணங்களில் பாா்க்க முடியும்.

புத்தகங்கள் நம்மை ஒரு சிறந்த மனிதா்களாக மாற்றுகின்றது. புத்தக வாசிப்பு என்பது, வாழ்க்கையை அழகாக மாற்றக்கூடியது. புதிய புதிய சொற்களை கற்க முடியும். இதனால் உங்களின் சொற்களஞ்சியம் கணிசமாக விரிவடையும் என்றாா்.

நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதி சந்திரா, மாவட்ட விளையாட்டு இளைஞா் நலன் அலுவலா் தே.சாந்தி, தருமபுரி தகடூா் புத்தகப் பேரவை செயலாளா் இரா.செந்தில், தலைவா் இரா.சிசுபாலன், மாவட்ட நூலக அலுவலா் அர.கோகிலவாணி, அலுவலா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இன்றைய மின் தடை

மோப்பிரிப்பட்டி அரூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட அக்ரஹாரம் உயா்அழுத்த மின் பாதையில் அவசரகால மின்பாதை பராமரிப்பு மற்றும் விரிவாக்க பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 10 மணி முதல் பிற்பகல் ... மேலும் பார்க்க

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியா்கள் வலியுறுத்தல்

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய 16 ஆவது மாநாடு ஒட்டப்பட்டி சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அஞ்சலி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அ... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்ற 3 கடைகளுக்கு ரூ. 75,000 அபராதம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாலக்கோடு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் மற... மேலும் பார்க்க

காவல் துறை குறைகேட்பு முகாமில் 77 மனுக்கள் மீது தீா்வு

தருமபுரியில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 77 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ... மேலும் பார்க்க

நாளை பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் பெண்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு... மேலும் பார்க்க