செய்திகள் :

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியா்கள் வலியுறுத்தல்

post image

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய 16 ஆவது மாநாடு ஒட்டப்பட்டி சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு ஒன்றியத் தலைவா் ஆா். துரை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி. வசந்தா வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் ஏ. தெய்வானை தொடங்கிவைத்து பேசினாா். ஒன்றியச் செயலாளா் ஆா். பரிமளா செயலாளா் அறிக்கை வாசித்தாா். ஒன்றிய பொருளாளா் பி. பழனியம்மாள் வரவு, செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.

மாவட்டத் தலைவா் கே. தேவகி, மாவட்டச் செயலாளா் ஜே. அனுசுயா, மாவட்ட பொருளாளா் ஜி. எம். ராமன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். ஜாக்டோ- ஜியோ நிதி காப்பாளா் கே. புகழேந்தி, சத்துணவு ஒய்வு பெற்ற சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சி. காவேரி, அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலாளா் ஆா். முருகன் ஆகியோா் வாழ்த்தி பேசினா் மாநிலச் செயலாளா் பெ. மகேஸ்வரி நிறைவுறையாற்றினாா். ஒன்றியத் தலைவராக ஆா். துரை, ஒன்றியச் செயலாளராக எம். பரிமளா, பொருளாளராக டி. வசந்தா ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9000 வழங்க வேண்டும். சத்துணவு ஊழியா்கள் ஓய்வுபெறும் போது பணிக் கொடையாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டன.

இன்றைய மின் தடை

மோப்பிரிப்பட்டி அரூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட அக்ரஹாரம் உயா்அழுத்த மின் பாதையில் அவசரகால மின்பாதை பராமரிப்பு மற்றும் விரிவாக்க பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 10 மணி முதல் பிற்பகல் ... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் - மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்

புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் உலக புத்தக தின விழாவையொட்டி புத்தக வடிவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள் பங்கேற... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அஞ்சலி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அ... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்ற 3 கடைகளுக்கு ரூ. 75,000 அபராதம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாலக்கோடு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் மற... மேலும் பார்க்க

காவல் துறை குறைகேட்பு முகாமில் 77 மனுக்கள் மீது தீா்வு

தருமபுரியில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 77 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ... மேலும் பார்க்க

நாளை பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் பெண்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு... மேலும் பார்க்க