Pahalgam: "தீவிரவாதத்துக்கு எதிராகத் தோளோடு தோள் நிற்கணும்" - இஸ்ரேல் பிரதமருடன்...
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது
திருப்பூரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மில்லா் பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் அப்பகுதியில் காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது மது விற்பனையில் ஈடுபட்ட திருப்பூரைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (34) என்பவரை வடக்கு காவல் துறையினா் கைது செய்தனா். இவரிடமிருந்து 5 மதுபாட்டில்கள், ரூ.330 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.