செய்திகள் :

திருமணத்தில் `ஊதா கலர் டிரம்' கிப்ஃட்; `மீரட் கொலை' நினைவால் மணமகன் அதிர்ச்சி

post image

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் தனது காதலனோடு சேர்ந்து கடந்த மாதம் தன் கணவரை கொலை செய்தார். அதோடு கணவரின் உடலை பல துண்டுகளாக வெட்டி அதனை ஊதா கலர் டிரம்மில் வைத்து சிமெண்ட் போட்டு மூடினார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து வட இந்தியாவில் `ஊதா கலர் டிரம்' பிரபலமாகி வருகிறது. சிலர் கிப்ஃட்டாக `ஊதா கலர் டிரம்' கொடுப்பது பிரபலமாகி வருகிறது.

அதேசமயம் ஊதா கலர் டிரம்மை பார்த்தாலே ஆண்கள் அச்சம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகமான ஆண்கள் தங்களுக்கு தங்களது மனைவி கொலை மிரட்டல் விடுப்பதாக போலீஸில் புகார் செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் ஹமீர்புரில் நடந்த திருமணத்தில், மணமகளுக்கு அவர்களின் நண்பர்கள் `ஊதா கலர் டிரம்' கிப்ஃட்டாக கொடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதனை பார்த்து மணமகன் அதிர்ச்சியாகி என்ன சொல்வது என்று தெரியாமல் ஜெர்க்காகி நின்றார். ஆனால் அந்த டிரம்மை பார்த்த மணமகள் சிரித்துவிட்டார். கிப்ஃட் கொடுத்த நண்பர்களும் சிரித்தனர். பிராங்க் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று ஊதா கலர் பிளாஸ்டிக் டிரம் கொடுத்திருந்தனர். அந்த டிரம்மில் ரிப்பன் கட்டப்பட்டு இருந்தது.

மணமேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர். அனைவரும் மீரட் சம்பவத்தை நினைத்து இது போன்று சிரித்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

அதனை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மீரட் சம்பவம் (ரஜபுத், முஸ்கான்)

ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில்,"உலகமே நோய்வாய்ப்பட்டுவிட்டது, ஒவ்வொரு தெருவிலும் மக்கள் இந்தப் படுகொலையை கேலி செய்கிறார்கள். இது போன்ற ஏதாவது அவர்களுக்கு நடக்கும்போது, ​​அவர்கள் வலியை உணர்வார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில், "இவர்கள் என்ன மாதிரியான நண்பர்கள்? அவர்கள் எதிரிகளை விட மோசமானவர்கள்'' என்றார்.

இது போன்ற பிராங்க் வெளியிடுபவர்கள் நண்பர்களாக இருக்க முடியாது என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

``உயிரோட வீட்டுக்கு போயிடுவியா..'' - நீதிபதிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் மிரட்டல்

ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆறு வருடமாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இறுதிகட்ட விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர் தரப்... மேலும் பார்க்க

IAF: தாக்கப்பட்டாரா இந்திய விமானப் படை வீரர்? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் ஷிலாதித்ய போஸ் மீது பெங்களூரு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. கடந்த 18-ம் தேதி ஷிலாதித்யாவும் அவரது மனைவி மதுமிதாவும் விமான நிலையத்திற்கு செல்லும் போது, க... மேலும் பார்க்க

Samantha: `ஆண்கள் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டுச் செல்வது ஏன்?' - சமந்தா லைக் செய்த வீடியோ

சக்சஸ்வெர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோ 'டைரி ஆஃப் எ சிஇஓ' என்ற youtube பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியைப் பகிர்ந்துகொண்டது. அந்த வீடியோவில் 'ஆண்க... மேலும் பார்க்க

``தண்ணீர் பஞ்சத்தால் இளைஞர்களுக்கு திருமணம் நடப்பதில்லை.." - தண்ணீரை பூட்டி வைக்கும் கிராமத்தினர்

நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் தான் அதிக பட்ச வெயில் அடிக்கிறது. இதனால் மக்கள் கிலோ மீட்டர் கணக்கில் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: தன்னை அழைப்பதாக எண்ணி கையைத் தூக்கியவருக்கு ஆப்ரேஷன்; வைரலான சம்பவத்தில் நடந்தது என்ன?

தம் பெயரை அழைத்ததாக கருதி சும்மா கையைத் தூக்கியதற்காக கையில் ஆறு தையல் போட்டப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோடா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல சிறப்பு வசதிகளைக் ... மேலும் பார்க்க

யுனெஸ்கோ-வின் பதிவேட்டில் பகவத் கீதை: `ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்’ - பிரதமர் மோடி

உலக நினைவகப் பதிவேட்டில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் (1864-1949) மற்றும் அவற்றின் நெறிமுறைகள் (1977-2005), மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (ஐக்கிய நாடுகள் சபை), பத்திரிகை சுதந்திரத்த... மேலும் பார்க்க