செய்திகள் :

பொது கழிப்பறைக்கு கக்கன், அண்ணா பெயர் - சர்ச்சையில் கோவை மாநகராட்சி

post image

கோவை மாநகராட்சி 95 வது வார்டுக்குட்பட்ட , அண்ணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொதுக் கழிப்பிடம் உள்ளது. அண்மையில் அந்தக் கழிப்பிடம் புனரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. இந்நிலையில், கழிப்பறையின் முன்பக்கச் சுவரில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாதுரையின் பெயரும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாக இருந்த கக்கன் பெயரும் எழுதப்பட்டுள்ளது. நூற்றாண்டு கடந்து போற்றப்படும் அரசியல் தலைவர்களின் பெயரை கழிப்பறைக்கு சூட்டியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட கண்டன அறிக்கையில், "கக்கன், அண்ணா போன்ற உயர்ந்த தலைவர்களின் பெயர் கழிப்பறைக்கு வைக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. எவ்வளவோ திட்டங்களுக்கு அவர்களின் பெயர் வைக்காமல் கழிப்பறைக்கு அவர்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது உள்நோக்குமாக பார்க்கப்படுகிறது. உடனடியாக தமிழக முதல்வர் இதில் தலையிட்டு அவர்களின் பெயர்களை அதிலிருந்து நீக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரனிடம் விளக்கம் கேட்டபோது, "15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. தற்போது இந்த கட்டடத்துக்கு புதிதாக வர்ணம் மட்டுமே பூசப்பட்டது. பெயர்கள் தற்போது எழுதப்படவில்லை." என்று கூறியிருக்கிறார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், கழிப்பறையில் தலைவர்கள் பெயர் எழுதபட்டு இருந்ததை மாநகராட்சி நிர்வாகம் அழித்துள்ளது.

TASMAC : `ரூ.50,000 கோடியை நெருங்கும் வருவாய்; 2024-25 ஆண்டில் அதிகரிப்பு’ - வெளியான டாஸ்மாக் தகவல்

தற்போது தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.2024 - 25 நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ... மேலும் பார்க்க

ஆணாதிக்கம், ஆபாசம், கொச்சைப் பேச்சு... ஒரு பொன்முடி சிக்கிவிட்டார். ஆனால், அவர்... இவர்?

பெண்களை மட்டம்தட்டிப் பேசுவது, வீடுகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. பெண்களை ஆபாசமாகப் பேசுவது, மேடைகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தான், சமீபத்தில் தனது `நகைச்சுவை உணர்வை’ மேடையில் அள்ளி ... மேலும் பார்க்க

இந்தி திணிப்பு: "மகாராஷ்டிராவில் அஞ்சும் பட்னாவிஸ்; மோடி பதிலளிக்க வேண்டும்" - ஸ்டாலின் ட்வீட்!

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிக்கப்பட்டதாக, கடும் எதிர்ப்புகள் கிளம்பின.பின்னர், "மும்மொழிக் கொள்கையின்படி மாணவர்கள் கற்றுக்கொள்ளும் மூன்றில் இரண்டு மொழிகள் இ... மேலும் பார்க்க

Adyar park: சுட்டிக்காட்டிய விகடன்; பயன்படுத்த முடியாத நிலையிலிருந்த பூங்காவை சீரமைக்கும் அதிகாரிகள்

சென்னை அடையாறு, இந்திரா நகரில் (வார்டு 170 , மண்டலம் 13 ,பகுதி 40 ) அமைந்துள்ளபெருநகர மாநகராட்சி பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு திடலில் இருக்கும் விளையாட்டு உபகரணங்கள் ஒன்று கூட பயன்படுத்தும் நிலை... மேலும் பார்க்க