செய்திகள் :

தனியாக பேசுவது இயல்பா? மனநோயின் அறிகுறியா? - உளவியல் நிபுணர் எச்சரிப்பது என்ன?

post image

நம்மில் பலருக்கு தனியாக பேசிக்கொள்ளும் பழக்கம் இருக்கும். ஒரு நாளில் என்னென்னவெல்லாம் நடந்தது என்று இரவில் தூங்கும் போது அதனை சிந்தித்துப் பார்ப்போம். பின்னர் அது குறித்து ஆழ்ந்த யோசித்து தங்களிடம் பேசிக்கொள்வார்கள். இதையே பழக்கமாகவும் வைத்துக் கொள்வார்கள்.

பொது இடங்களில், வீடுகளில், பாத்ரூம்களில், கண்ணாடி முன்பு என தங்களிடம் அல்லது மனசாட்சியிடம் பேசுவதாக உரையாடிக் கொள்வார்கள்.

இப்படி தனியாக பேசுவது இயல்பானதா அல்லது மனநோயின் அறிகுறியா? என்று கேள்வி எழுந்திருக்கும்.

இது குறித்து உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் விகடனுக்கு பகிர்ந்துள்ளார்.

உளவியல் நிபுணர் Dr. chitra aravind

உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் கூற்றுப்படி, ஒருவர் தனியாக பேசிக்கொண்டாலே மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறி விட முடியாது.

சுய மதிப்பீடு செய்வதற்காக ஒருவர் தனியாக பேசிக் கொள்கிறார் என்றால் அது தவறில்லை, தங்களின் அன்றைய நாள் குறித்து புரிந்து கொள்ளவும், தனிப்பட்ட நபரின் மதிப்பு குறித்து தெரிந்து கொள்வதற்கு இவ்வாறு செய்வதால் பாதிப்பு இல்லை.

மாறாக இதனையே பழக்கமாக வைத்துக் கொண்டு, அது அந்த தனிப்பட்ட நபரின் வாழ்க்கையையும் வேலையையும் பாதிக்கிறது என்றால் மன ஆலோசகரை அணுக வேண்டும்.

தனியாக பேசுவதுடன் சில அறிகுறிகள் தெரிந்தால், அதாவது தனியாக சிரித்தல் அல்லது அவர்களின் வழக்கமான நடைமுறைகளில் மாற்றம் தெரிந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.

சிலர் ஒரு நாளில் நடந்த சம்பவத்தை சமாளிப்பதற்காக மீண்டும் அதே போன்று நடப்பதாக எண்ணி அந்த விஷயத்தை அவர்கள் சமாளிப்பது போல் எண்ணிக் கொள்கிறார்கள். அப்படி செய்வது மனநோயின் அறிகுறியாகும்.

தனியாக பேசிக் கொள்ளும் பழக்கம் தங்களின் மதிப்பீட்டை அறிவதோடு இருந்தால் அது மற்றவர்களை பாதிக்காது. இதே பழக்கத்தை தொடர்ந்தால் குடும்பத்தினர்களிடமும் வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்களிடமும் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தும்.

மற்றவர்கள் இந்த பழக்கமுடையவரை மனநோயால் பாதிக்கப்பட்டவர்களாக பார்ப்பார்கள். எனவே சாதாரணமாக ஒருவர் தனியாக பேசிக் கொள்கிறார் என்றால் அது தவறில்லை... மாறாக இதே பழக்கத்தை ஒரு நாள் முழுவதும் வைத்துக் கொண்டால் அது வேறு அறிகுறியில் சுட்டிக்காட்டுவதாக கூறுகிறார் சித்ரா அரவிந்த்.

Health: 20களில் கருத்தரித்தால்தான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா? மருத்துவர் சொல்வது என்ன?

உயர் கல்வி, வேலையில் அடுத்தகட்ட வளர்ச்சி, ஆன்சைட் என இந்தக் காலப் பெண்கள் தங்கள் கரியர் மீது மிகுந்த காதலுடன் இருக்கிறார்கள்.அதே காலகட்டத்தில் திருமணம், குழந்தை எனத் திட்டமிட்டால் அது தங்கள் கரியரில் ... மேலும் பார்க்க

Health: நாம் ஏன் தினமும் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும்? நிபுணர் சொல்லும் விளக்கம் இதான்!

சரிவிகித உணவு என்பது மனித உடலுக்குத் தேவையான அனைத்து அடிப்படைச் சத்துக்களையும் கொடுப்பதாகும். சரிவிகித உணவு மற்றும் அதன் நன்மைகள் குறித்தும், சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாததால் வரும் விளைவுகள் குறித்... மேலும் பார்க்க

Health: அடிக்கடி கிரில்டு சிக்கன் சாப்பிடுறீங்களா? மருத்துவர் எச்சரிப்பது என்ன?

அசைவ உணவகங்களில் ஆவி பறக்க... சுடச்சுட... தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் சுண்டி இழுக்கும்.தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில... மேலும் பார்க்க

Helmet: உங்களுக்கு ஏற்றபடி ஹெல்மெட் வாங்குவது முதல் பராமரிப்பு வரை..!

போலீஸ் கெடுபிடிக்குப் பயந்து ஹெல்மெட் அணிபவர்களே அதிகம்! நாம் வேண்டாவெறுப்பாக ஹெல்மெட் அணிந்தாலும், அது என்னவோ நம்மைக் காக்கும் வேலையைச் செய்துகொண்டே இருக்கிறது. கடும் வெயிலில், வியர்வையில் குளிப்போம்... மேலும் பார்க்க

`கார் பயணங்களில் 'இந்தத்' தண்ணீர் வேண்டவே வேண்டாம்! மீறினால்..' -எச்சரிக்கும் மருத்துவர்

ஆபீஸ் செல்வது, வெளியூர் பயணம், லாங் டிரைவ் என காரில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்?தாகம் அடிக்கும், தண்ணீர் தேவைப்படும் என உங்கள் கார் டிரிப்பில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்பவரா நீங... மேலும் பார்க்க

Health: தெரிந்த சோளம்; தெரியாத தகவல்கள்... சொல்கிறார் உணவியல் நிபுணர்!

சோளம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? கடற்கரைக்குச் சென்றாலே நம் கண்கள் முதலில் தேடுவது சோளக்கடைகளைத்தான். புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் என இதில் இல்லாத சத்துக்க... மேலும் பார்க்க