செய்திகள் :

ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த நிக்கோலஸ் பூரன்!

post image

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் பகிர்ந்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடர் அவருக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிக்கோலஸ் பூரன் 377 ரன்கள் குவித்துள்ளார். அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன், விராட் கோலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் அவர் உள்ளார்.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார்: ரவி சாஸ்திரி

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 10 வீரர்களில் நிக்கோலஸ் பூரன் ஒருவரின் ஸ்டிரைக் ரேட் மட்டுமே 200-க்கும் அதிகமாக உள்ளது. மற்ற வீரர்களின் ஸ்டிரைக் ரேட் 200-க்கும் குறைவாகவே உள்ளது.

ரகசியம் பகிர்ந்த நிக்கோலஸ் பூரன்

கரீபியன் தீவுகளில் உள்ள ஆடுகளங்களைப் போன்று இந்தியாவிலும் ஆடுகளங்கள் இருப்பதே தன்னுடைய வெற்றிக்கான ரகசியம் என லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் சில ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். இங்குள்ள ஆடுகளங்கள் எனது சொந்த மண்ணில் உள்ள ஆடுகளங்களைப் போன்று இருக்கின்றன. கரீபியன் தீவுகளின் ஆடுகளங்களில் அதிக அளவிலான பௌன்சர்கள் இருக்காது. இங்குள்ள ஆடுகளங்கள் உண்மையில் பேட்டிங் செய்வதற்கு நல்ல ஆடுகளங்கள். இந்தியாவில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இங்குள்ள ரசிகர்கள் மிகவும் ஊக்கமளிக்கிறார்கள்.

இதையும் படிக்க: சிஎஸ்கேவுடன் நீண்ட காலம் பயணிக்கவுள்ள இளம் வீரர்; யாரைக் கூறுகிறார் அனில் கும்ப்ளே?

பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிக்ஸர் விளாசுவதற்காக வேகமாக பேட்டினை சுழற்ற தனியாக எந்த ஒரு பயிற்சியும் நான் மேற்கொள்வதில்லை. வேகமாக பேட்டினை சுழற்றுவது எனக்கு இயல்பாகவே வருகிறது. பேட்டினை வேகமாக சுழற்றுவதன் பின்னணியில் எந்த ஒரு ரகசியமும் இல்லை. பேட்டினை எப்படி வேகமாக சுழற்றுகிறீர்கள் என்ற கேள்வி என்னிடம் மில்லியன் முறை கேட்கப்பட்டுள்ளது. பேட்டினை வேகமாக சுழற்ற ஒருபோதும் தனியாக எந்த ஒரு பயிற்சியையும் நான் மேற்கொண்டதில்லை என்றார்.

பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் அதிரடி: கொல்கத்தாவுக்கு 202 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்... மேலும் பார்க்க

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது எப்படி? டேனியல் வெட்டோரி பதில்!

சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் ... மேலும் பார்க்க

கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுடன் நீண்ட காலம் பயணிக்கவுள்ள இளம் வீரர்; யாரைக் கூறுகிறார் அனில் கும்ப்ளே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த அணியுடன் நீண்ட காலம் பயணிக்கும் திறன் கொண்ட இளம் வீரரை கண்டுபிடித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் செ... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும்: ரிங்கு சிங்

ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.கடந்த ஐபிஎல் சீசனிலிருந்து ஐபிஎல் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 200 ரன்களுக்... மேலும் பார்க்க

ஜியோ ஹாட்ஸ்டார் 5 வாரங்களில் 10 கோடி சந்தாரார்கள்..! ரூ.10,000 கோடி வருமானம்!

ரிலையன்ஸ் நிறுவனமும் வால்ட் டிஸ்னி ஹாட்ஸ்டாரும் இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் கடந்த பிப்.14, 2025 முதல் இயங்கி வருகின்றன. ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது. இதுவரை வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க