செய்திகள் :

ஜியோ ஹாட்ஸ்டார் 5 வாரங்களில் 10 கோடி சந்தாரார்கள்..! ரூ.10,000 கோடி வருமானம்!

post image

ரிலையன்ஸ் நிறுவனமும் வால்ட் டிஸ்னி ஹாட்ஸ்டாரும் இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் கடந்த பிப்.14, 2025 முதல் இயங்கி வருகின்றன.

ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது. இதுவரை வெள்ளிக்கிழமை (ஏப்.25) உடன் ரூ.10,006 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த 5 வாரங்களில் 100 மில்லியன் (10 கோடி) சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் இன்டர்ஸ்ட்ரிஸ் அளித்த தகவலின்படி, “முக்கிய விளையாட்டு நிகழ்வான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் போட்டிகளால் மார்ச்.25ஆம் தேதி வரை ஜியோ ஹாட்ஸ்டார் மாதத்திற்கு 503 மில்லியன் (50.3 கோடி) ஆக்டிவ் பயனாளர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் டிஜிட்டல் லைப்ரரியில் அதிகபட்சமான 320ஆயிரம் மணி நேரங்களைக் கொண்டதாக மாறியுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு போட்டியாக மார்க்கெட் மதிப்பில் 34 சதவிகிதம் ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளதாகவும் மாதத்திற்கு 760 மில்லியன் (76 கோடி) பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ், வால்ட் டிஸ்னி, வியாகாம் 18 மீடியா ஆகியவை கடந்த நவ.14, 2024இல் இணைவதாக அறிவித்தன.

ஜியோ ஹாட்ஸ்டார் கிரிக்கெட் போட்டிகளை குறிப்பாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதால் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐபிஎல் மட்டுமல்லாமல் மகளிர் கிரிக்கெட், கால்பந்து, இருதரப்பு தொடர்களையும் ஒளிபரப்புகின்றன.

ஐபிஎல் 2025இன் முதல் வாரத்தில் 38 சதவிகிதம் அதாவது 1.4 பில்லியன் டிஜிட்டல் பார்வைகளை ஜியோ ஹாட்ஸ்டார் கடந்துள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஐசிசி உலகக் கோப்பை 2023-ஐ விட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-இல் அதிகமான பார்வைகளைப் பெற்று, இதற்கு முந்தையை சாதனைகளை எல்லாம் இந்தத் தொடர் முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஒளிபரப்புவதால் கூடுதலாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் வரும் மே மாதம் 25ஆம் தேதி நடைபெறவிருக்கிறது கவனிக்கத்தக்கது.

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது எப்படி? டேனியல் வெட்டோரி பதில்!

சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் ... மேலும் பார்க்க

கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த நிக்கோலஸ் பூரன்!

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் பகிர்ந்துள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் ... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுடன் நீண்ட காலம் பயணிக்கவுள்ள இளம் வீரர்; யாரைக் கூறுகிறார் அனில் கும்ப்ளே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த அணியுடன் நீண்ட காலம் பயணிக்கும் திறன் கொண்ட இளம் வீரரை கண்டுபிடித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் செ... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும்: ரிங்கு சிங்

ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.கடந்த ஐபிஎல் சீசனிலிருந்து ஐபிஎல் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 200 ரன்களுக்... மேலும் பார்க்க

ஏலத்தில் தவறு செய்துவிட்டோம்..! ஒப்புக்கொண்ட சிஎஸ்கே பயிற்சியாளர்!

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு அதன் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் அளித்த பேட்டியில் ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார். சேப்பாக்கில் நேற்றிரவு சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டி... மேலும் பார்க்க