செய்திகள் :

கோடை வெயிலில் கருகும் சின்னமனூர் வெற்றிலை - கவலையில் விவசாயிகள்

post image

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி, சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி நடைபெறுகிறது. இதில் பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் வெள்ளை வெற்றிலையும், சின்னமனூர் வட்டாரத்தில் கருப்பு வெற்றிலையும் சாகுபடி செய்யப்படுகிறது.

சின்னமனூர் விவசாயிகள்

தேனி மாவட்டத்தில் சின்னமனூர் பகுதியில் அதிக பரப்பில் வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயில் காரணமாக வெற்றிலை கொடிகள் கருகி வருகின்றன. கோடை மழை பொய்த்து அவ்வப்போது லேசான மழை பெய்வது மண்ணை சூடாக்கி வருவதால் வெற்றிலை கொடிகள் கருகிவருகிறது.

மேலும் இழைகளில் கறுப்பு புள்ளிகள் விழுகின்றன. இதனால் வெற்றிலை பறிக்க முடியவில்லை. வரத்து குறைந்தபோதிலும், வெள்ளை வெற்றிலை கிலோ ரூ.300-ல் இருந்து ரூ.280 ஆகவும், கறுப்பு வெற்றிலை ரூ.220-ல் இருந்து ரூ.190 ஆகவும் குறைந்துள்ளது.

வெற்றிலை

ஒரு வெற்றிலை கொடிகளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு மகசூல் கிடைக்கும். 25 நாள்களுக்கு ஒரு முறை வெற்றிலை பறிப்பார்கள். ஆண்டிற்கு 12 முறை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது நிலவும் வெப்பம் காரணமாக 10 மாத கொடிகள் கருக துவங்கி உள்ளது. இந்த கொடிகளை அகற்றி விட்டு, புதிய கொடிகளை நடவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகிறார்கள்.

``தவறுகளை மறைக்க மத்திய அரசிடம் சண்டை இழுத்து, பிரச்னை செய்கிறது திமுக..'' - ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றியம் மற்றும் ராஜபாளையம் தொகுதி சார்பில் அதிமுக பூத் கமிட்டி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்க... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கம்: வேருடன் பிடுங்கி மறுநடவு; மீண்டும் உயிர் பெற்ற 50 வயது ஆலமரம்..!

தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலைய சாலை விரிவாக்க பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இதற்காக சாலையோரத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இந்த நிலையில் பழைய ஹவுசிங்யூனிட் அருகே 50 ஆண்... மேலும் பார்க்க

``போதைப்பொருள் பறிமுதலுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளது..'' - NIA சொல்வதென்ன?

குஜராத்தில் போதைப்பொருள் பறிமுதலுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) போலீஸார் தகவல் தெரிவித்திருக்கின்றனர். குஜராத் கடல் பகுதியில... மேலும் பார்க்க

தீவிரவாதிகளுக்கு ஆதரவு: ``அமெரிக்காவுக்காக மோசமான வேலையை செய்து வருகிறோம்'' - பாகிஸ்தான் அமைச்சர்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் இந்தியாவை அதிர்ச்சியடையச் செய்தது. இந்தத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என லஷ்கர் இ தொய்பாவும், பாகிஸ்தானும் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், ... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென சம்பந்தமில்லாமல் பேசும் மாமனார்.. சோடியம் குறைந்ததுதான் காரணமா?

Doctor Vikatan: என் மாமனாருக்கு 75 வயதாகிறது. கடந்த வாரம் திடீரென சம்பந்தமில்லாத விஷயங்களைஉளற ஆரம்பித்தார். இது எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. உடலில் சோடியம் அளவு குறைந்தால் இப்படித்தான... மேலும் பார்க்க

Trump: `பாகிஸ்தானுடனும் நான் நெருக்கமாக இருக்கிறேன், அதனால்..' -காஷ்மீர் தாக்குதல் குறித்து டிரம்ப்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் தாக்க... மேலும் பார்க்க