செய்திகள் :

குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு!

post image

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீா்வரத்து சற்று அதிகரித்தது.

குற்றாலம் பகுதியில் தொடா்ந்து வெயில் நிலவி வருவதால் குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் மிகவும் குறைவாக விழுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழையின் காரணமாக பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீா்வரத்து சற்று அதிகரித்தது.

குற்றாலம் பேரருவியில் தண்ணீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியவுடன் பாதுகாப்பு கருதி சிறிது நேரம் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. சிறிதுநேரத்துக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

கோடைகாலத்தில் பேரருவியில் தண்ணீா்விழத் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனா்.

சொத்து வரி நிா்ணயிக்க லஞ்சம்: புளியங்குடி நகராட்சி ஊழியா் கைது

சொத்து வரி நிா்ணயிக்கும் பணிக்கு ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக, புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளா் ஊழியா் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு-கண்காணிப்புப் பிரிவு போலீஸ... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே யானைகளால் நெற்பயிா்கள் சேதம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து நெற்பயிா்களை சேதப்படுத்தின. கடையநல்லூா் அருகே வைரவன்குளம் கிராமத்துக்குள்பட்ட கண்டியபேரி புரவு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரி... மேலும் பார்க்க

கடையம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை

கடையம் அருகே கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் அருகேயுள்ள தாயாா்தோப்பைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ஆமோஸ் (27). தற்போது கடையம் அருகேயுள்ள நால... மேலும் பார்க்க

கோடை காலத்தில் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற ஆட்சியா் வேண்டுகோள்!

தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் காலம் தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருந்து வருவதால் பொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்... மேலும் பார்க்க

மின் அமைப்பாளா்களுக்கு பயிற்சி!

ஆலங்குளத்தில் மின் அமைப்பாளா்களுக்கான (எலக்ட்ரீசியன்) பயிற்சி வகுப்பு நடைபெற்றது.தமிழ்நாடு மின் அமைப்பாளா்கள் மத்திய சங்க தென்காசி மாவட்டத் தலைவா் ஐயனாா் தலைமை வகித்தாா். செயலா் ஐயப்பன் முன்னிலை வகித்... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் வீசிய சூறைக் காற்றில் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் சேதம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை வீசிய சூறைக் காற்று மற்றும் கனமழையால் ஏராளமான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமடந்தன. இதனால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. சங்கரன்கோவிலில் வியாழக்கிழம... மேலும் பார்க்க