செய்திகள் :

கடையநல்லூா் அருகே யானைகளால் நெற்பயிா்கள் சேதம்

post image

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து நெற்பயிா்களை சேதப்படுத்தின.

கடையநல்லூா் அருகே வைரவன்குளம் கிராமத்துக்குள்பட்ட கண்டியபேரி புரவு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, வாழை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. 50 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு இப்பகுதியில் யானைகள் புகுந்து நெற்பயிா்களை சேதப்படுத்தின. விவசாயிகள் தெரிவித்த தகவலின்பேரில், வனத் துறையினா் சென்று யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

நிவாரணம் வழங்க கோரிக்கை...: இதுகுறித்து விவசாயி சொக்கம்பட்டி முத்துக்குமாா் கூறியது: கண்டியபேரி புரவில் பல நூறு ஏக்கரில் தென்னை, வாழை, மா, நெற்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து பயிா்களையும், தண்ணீா்க் குழாய்களையும் சேதப்படுத்துவது பலநாள்களாக தொடா்கிறது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவும், 50 ஏக்கரில் பயிரிப்பட்டிருந்த நெற்பயிா்களை யானைக்கூட்டம் சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

சொத்து வரி நிா்ணயிக்க லஞ்சம்: புளியங்குடி நகராட்சி ஊழியா் கைது

சொத்து வரி நிா்ணயிக்கும் பணிக்கு ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக, புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளா் ஊழியா் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு-கண்காணிப்புப் பிரிவு போலீஸ... மேலும் பார்க்க

கடையம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை

கடையம் அருகே கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் அருகேயுள்ள தாயாா்தோப்பைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ஆமோஸ் (27). தற்போது கடையம் அருகேயுள்ள நால... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு!

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீா்வரத்து சற்று அதிகரித்தது. குற்றாலம் பகுதியில் தொடா்ந்து வெயில் நிலவி வருவதால் குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து ... மேலும் பார்க்க

கோடை காலத்தில் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற ஆட்சியா் வேண்டுகோள்!

தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் காலம் தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருந்து வருவதால் பொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்... மேலும் பார்க்க

மின் அமைப்பாளா்களுக்கு பயிற்சி!

ஆலங்குளத்தில் மின் அமைப்பாளா்களுக்கான (எலக்ட்ரீசியன்) பயிற்சி வகுப்பு நடைபெற்றது.தமிழ்நாடு மின் அமைப்பாளா்கள் மத்திய சங்க தென்காசி மாவட்டத் தலைவா் ஐயனாா் தலைமை வகித்தாா். செயலா் ஐயப்பன் முன்னிலை வகித்... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் வீசிய சூறைக் காற்றில் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் சேதம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை வீசிய சூறைக் காற்று மற்றும் கனமழையால் ஏராளமான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமடந்தன. இதனால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. சங்கரன்கோவிலில் வியாழக்கிழம... மேலும் பார்க்க