செய்திகள் :

பிரச்னைகளைவிட பிரசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: சமாஜவாதி

post image

பஹல்காம் தாக்குதலுக்கு, பாஜக அரசின் இயலாமைதான் காரணம் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக அரசின் மீது குற்றம் சாட்டிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்ததாவது, முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதைவிட, பிரசாரத்துக்குத்தான் பாஜக அரசு முன்னுரிமை அளிக்கிறது. நாட்டுக்குள் எவ்வாறு பயங்கரவாதிகள் நுழைந்தனர் என்பதுதான் கேள்வி. இது அரசின் தோல்வி; உளவுத் துறையின் தோல்வி.

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 கோடி நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால், மக்கள் தங்கள் தகுதிக்குரிய வேலையினைப் பெற முடியவில்லை. அரசால் வேலைவாய்ப்புகள் வழங்க முடியாததால், பட்டம் பெற்றவர்கள், தொழில்கல்வி படித்தவர்கள் என இளைஞர்கள் பலரும் டெலிவரி ஊழியர்களாக மாறுகின்றனர்.

வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்றால், இடஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்றுதான் பொருள். கல்வியில் நிறைய அரசியல் தலையீடுகள் நடந்து வருகின்றன.

அதிகாரிகளின் மூலம் தவறான செயல்களை அரசு செய்து வருகிறது. ஊழல் செய்யும் அதிகாரிகளும் முதல்வரின் வீட்டில் ஒளிந்து கொள்கின்றனர் என்று கூறினார்.

இதையும் படிக்க:எல்லையில் போர் பதற்றம்: 130 அணு ஆயுதங்கள் தயார் - பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு

பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்: பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) வைத்திருந்த காரணத்தால் பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண் வாகா எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டாா். உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரை சோ்ந்த சனா என்ற பெண் ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க உளவு அமைப்பு தலைவா்!

ஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (எஃப்பிஐ) தலைவா் காஷ் படேல், இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றாா். இது தொட... மேலும் பார்க்க

கனடா பயணி விடுத்த வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு!

பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த ‘இண்டிகோ’ பயணிகள் விமானத்தில் பயணியொருவா் தன்னுடன் வெடிகுண்டு கொண்டு வந்திருப்பதாக கூறியதால் வாரணாசி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரபரப்பான சூழல் உண்டானது. தொடா்ந்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும்! திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சித் தலைவா் மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானா்ஜி தெரிவி... மேலும் பார்க்க

பைக் மீது மோதி கிணற்றுக்குள் கவிழ்ந்த வேன்! மீட்க வந்தவா் உள்பட 11 போ் உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தின் மந்த்செளா் மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிள்க் மீது மோதிய வேன், பின்னா் சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்தவா்கள், அவா்களை மீட்க வந்தவா், பைக் ஓட்டியவா் என... மேலும் பார்க்க

காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு! அதிகாரிகள் நடவடிக்கை

ஜம்மு-காஷ்மீரில் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இத்துடன் சோ்த்து, கடந்த 3 நாள்களில் 9 பயங்கரவாதிகள் மற்றும் கூட்டாளிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. அ... மேலும் பார்க்க