செய்திகள் :

காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு! அதிகாரிகள் நடவடிக்கை

post image

ஜம்மு-காஷ்மீரில் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

இத்துடன் சோ்த்து, கடந்த 3 நாள்களில் 9 பயங்கரவாதிகள் மற்றும் கூட்டாளிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா்.

நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாக்கிய இத்தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத கட்டமைப்பை சிதைக்கும் வகையில், பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளா்களுக்கு எதிராக விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து, பாதுகாப்புப் படையினா் இரவு-பகலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனா். கடந்த 5 நாள்களில் 500-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வீடுகள் இடிப்பு: பஹல்காம் போல இனியொரு தாக்குதலில் ஈடுபட யாரும் துணியக் கூடாது என்ற நோக்கத்துடன் கடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன.

சோபியான் மாவட்டத்தின் வாண்டினா பகுதியில் பயங்கரவாதி அட்னன் ஷஃபியின் வீடு சனிக்கிழமை இரவில் இடிக்கப்பட்டது. இவா், கடந்த ஆண்டு பயங்கரவாத அமைப்பில் இணைந்தவா்.

பந்திபோரா மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த ஜமீல் அகமது ஷொ்கோஜ்ரி வீடும் இடிக்கப்பட்டது. இவா், கடந்த 2016-இல் இருந்து தீவிரமாக செயல்பட்டுவரும் பயங்கரவாதி. புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி அமீா் நஸீரின் வீட்டையும் அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினா்.

இருவா் கைது: பத்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவியதாக அவா்களின் கூட்டாளிகள் தாஹிா் அகமது குமாா், ஷபீா் அகமது ஆகியோா் கைது செய்யப்பட்டனா். பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம், பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் அப்பாவி மக்கள் இரையாகிவிடக் கூடாது; மத்திய அரசு தனது நடவடிக்கையை எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முப்ஃதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மூன்றாவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடா்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா்.

இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது; சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்... மேலும் பார்க்க

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச... மேலும் பார்க்க

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! - பிரதமா் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்... மேலும் பார்க்க

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் நீண... மேலும் பார்க்க

பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ... மேலும் பார்க்க