செய்திகள் :

பைக் மீது மோதி கிணற்றுக்குள் கவிழ்ந்த வேன்! மீட்க வந்தவா் உள்பட 11 போ் உயிரிழப்பு!

post image

மத்திய பிரதேசத்தின் மந்த்செளா் மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிள்க் மீது மோதிய வேன், பின்னா் சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்தவா்கள், அவா்களை மீட்க வந்தவா், பைக் ஓட்டியவா் என 11 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: நாராயண்கா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 13 பேருடன் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த ஒரு வேன், எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்தது. வேனில் இருந்தவா்களில் 9 போ் உயிரிழந்தனா். மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த நபரும் இந்த விபத்தில் உயிரிழந்தாா். மேலும் மீட்புப் பணிக்காக கிணற்றுக்குள் இறங்கிய உள்ளூா் கிராமவாசியான மனோகா் என்பவரும், உயிரிழந்தாா்.

தேசிய பேரிடா் மீட்புப் படையினா் உதவியுடன் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையில் 4 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். இந்த விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்... மேலும் பார்க்க

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச... மேலும் பார்க்க

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! - பிரதமா் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்... மேலும் பார்க்க

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் நீண... மேலும் பார்க்க

பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ... மேலும் பார்க்க