செய்திகள் :

நடுவர் மீது தாக்குதல்: மன்னிப்பு கேட்ட ரியல் மாட்ரிட் வீரர்!

post image

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர் அன்டோனியோ ரூடிகர் தான்செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்த அன்டோனியோ ரூடிகர் சிறந்த டிஃபெண்டராக அறியப்படுகிறார். தனது ஆக்ரோஷமான பாணிக்கு புகழ்பெற்றவர்.

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்டை கூடுதல் நேரத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் கூடுதல் நேரத்தின்போது ரியல் மாட்ரிட் வீரர் ரூடிகர், வினிசியஸ் ஜுனியர் நடுவரின் மீது பாட்டிகளையும் ஐஸ் கட்டிகளையும் தூக்கி வீசுவார்கள்.

நடுவரை அடிக்கவும் பாய்ந்த ரூடிகரை ரியல் மாட்ரிட் அணி உதவியாளர்கள் இழுத்துப் பிடித்தனர். பின்னர் அவரை திடலில் இருந்து வெளியேற்றினார்கள்.

இந்தப் போட்டியில் அன்டோனியோ ரூடிகர் (120+3’), லூகாஸ் வாஸ்கியூஸ் (120+3), ஜுட் பெல்லிங்ஹாம் (120+4’) நிமிஷங்களில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

நடுவரைத் தாக்கில் 2 ஆண்டுகள் அல்லது 10-12 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

நடுவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதால் தண்டனை அதிகமாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான்செய்த செயலுக்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

கடந்த இரவில் நான் செய்த செயலுக்கு எந்தவிதமான சாக்குப்போக்கும் தெரிவிக்க முடியாது. நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இரண்டாம் பாதியில் இருந்து நாங்கள் சிறப்பாக விளையாடத் தொடங்கினோம்.

111-ஆவது நிமிஷத்திற்குப் பிறகு என்னால் எனது அணிக்கு உதவ முடியவில்லை. போட்டி முடியும் முன்பு நான் தவறு செய்துவிட்டேன்.

நடுவர், சங்கடப்படுத்திய மற்ற அனைவர்களுக்கும் நான் மீண்டும் எனது மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ரூடிகர் பகிர்ந்த பதிவு.

மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டி: இறுதியில் பாா்சிலோனா!

மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பாா்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.இந்த அணிகள் மோதிய அரையிறுதியில், கட... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆசிய வாலிபால்: இந்தியா விலகல்!

பாகிஸ்தானில் மே மாதம் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்தியா விலகியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.இஸ்லாமாபாதில் மே 28 முதல் மத்திய ... மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்..!

சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 கோல் கணக்கில் இன்டர் காசி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, அரையிறுதியில் இடம் பிடித்தது. தில்லியில் நடைபெற்ற ஆசிய யோகாசன சாம்பியன்ஷிப்பில் இ... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில், தவிக்கும் வனவிலங்குகள் - புகைப்படங்கள்

வெயிலின் உக்கிரத்தையடுத்து மரத்தடி நிழலில் ஓய்வெடுக்கும் மான்கள்.குளத்தில் மீனைத் தேடும் நாரைகள்.பூங்காவில் இலைகளை சாப்பிட முயற்சிக்கும் மான்.பூங்காவில் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பஞ்ச ... மேலும் பார்க்க

ரெட்ரோ முன்பதிவு துவக்கம்!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் முன்பதிவு துவங்கியுள்ளது. சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயக... மேலும் பார்க்க