செய்திகள் :

பாகிஸ்தானில் ஆசிய வாலிபால்: இந்தியா விலகல்!

post image

பாகிஸ்தானில் மே மாதம் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்தியா விலகியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இஸ்லாமாபாதில் மே 28 முதல் மத்திய ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் நடைபெறவுள்ள நிலையில், அதில் இந்திய அணி பங்கேற்பதாக இருந்தது. இதற்காக 22 வீரா்கள் உள்பட 30 போ் அடங்கிய இந்திய அணி பாகிஸ்தான் செல்விருந்தது. அதற்காக மத்திய அரசும் தடையில்லாச் சான்று அளித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக, பாகிஸ்தானில் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்தியா விலகியது. இந்திய அணி பாகிஸ்தான் செல்வதற்கான தடையில்லாச் சான்றை மத்திய அரசு ரத்து செய்ததது.

இந்திய அணி போட்டியிலிருந்து விலகியது ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் வாலிபால் சம்மேளனம், தற்போது இந்திய அணிக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் அல்லது இலங்கை அணி போட்டியில் சோ்க்கப்படும் என கூறியுள்ளது. ஏற்கெனவே அந்தப் போட்டியில், ஈரான், துருக்மீனிஸ்தான், கிா்ஜிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றனா்.

பாகிஸ்தானிலிருந்து திரும்பிய இந்தியா்கள்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழலை அடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியா்களும், பாகிஸ்தானிலிருக்கும் இந்தியா்களும் வெளியேற அந்தந்த நாடுகள் உத்தரவிட்டுள்ளன.

அந்த வகையில் பாகிஸ்தான் சூப்பா் லீக் போட்டியின் தயாரிப்பு மற்றும் ஒளிபரப்பு குழுவில் இருந்த இந்தியா்கள் 23 போ் வாகா எல்லை வழியாக ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக நாடு திரும்பினா்.

சபலென்கா வெற்றி; பெகுலா, பாலினிக்கு அதிா்ச்சி!

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினாா். மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்ற... மேலும் பார்க்க

மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டி: இறுதியில் பாா்சிலோனா!

மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பாா்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.இந்த அணிகள் மோதிய அரையிறுதியில், கட... மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்..!

சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 கோல் கணக்கில் இன்டர் காசி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, அரையிறுதியில் இடம் பிடித்தது. தில்லியில் நடைபெற்ற ஆசிய யோகாசன சாம்பியன்ஷிப்பில் இ... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில், தவிக்கும் வனவிலங்குகள் - புகைப்படங்கள்

வெயிலின் உக்கிரத்தையடுத்து மரத்தடி நிழலில் ஓய்வெடுக்கும் மான்கள்.குளத்தில் மீனைத் தேடும் நாரைகள்.பூங்காவில் இலைகளை சாப்பிட முயற்சிக்கும் மான்.பூங்காவில் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பஞ்ச ... மேலும் பார்க்க

நடுவர் மீது தாக்குதல்: மன்னிப்பு கேட்ட ரியல் மாட்ரிட் வீரர்!

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர் அன்டோனியோ ரூடிகர் தான்செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த அன்டோனியோ ரூடிகர் சிறந்த டிஃபெண்டராக அறியப்படுகிறார். தனது ஆக்... மேலும் பார்க்க

ரெட்ரோ முன்பதிவு துவக்கம்!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் முன்பதிவு துவங்கியுள்ளது. சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயக... மேலும் பார்க்க