செய்திகள் :

``தவறுகளை மறைக்க மத்திய அரசிடம் சண்டை இழுத்து, பிரச்னை செய்கிறது திமுக..'' - ராஜேந்திர பாலாஜி

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றியம் மற்றும் ராஜபாளையம் தொகுதி சார்பில் அதிமுக பூத் கமிட்டி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு தலைமை உரையாற்றினார்.

இந்தநிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், "அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டுகிற பணியை திமுக கட்சியினர் செய்கிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி

அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி முயற்சியால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, பேரூராட்சிகள், ராஜபாளையம் நகராட்சிகள், பேரூராட்சிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து தரமான பைப்புகளை வைத்து குடிநீர் சப்ளை செய்தோம். தற்போது திமுக ஆட்சியில் போடப்படும் பைப்புகளை கைகளால் அழுத்தினாலே உடைந்துவிடும் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.

குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழல், சாக்கடை அள்ளுவதில் ஊழல், குப்பை அள்ளுவதில் ஊழல். திமுக ஆட்சியில் ஊழல் மட்டுமே நடைபெறுகிறது.

வேலை ஒன்றும் நடைபெறவில்லை. தி.மு.க. ஆட்சியில் மூன்று வருடம் கவுன்சிலராக இருந்தவர்கள் மிகப்பெரிய வீடு கட்டுகிறார்கள் லஞ்சம் வாங்கி பிழைக்கிறார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் அதிமுக ஆளவேண்டும்.

ராஜேந்திர பாலாஜி பேசுகையில்..

தமிழகத்தில் திமுக ஆட்சியின் மீது மக்களிடம் வெறுப்பு அலை வந்துள்ளது. திமுகவினர் மத்திய அரசிடம் தேவையில்லாமல் சண்டை இழுப்பதும், கொடுத்த நிதியை வாங்கி சரியான திட்டங்களை செயல்படுத்தாமல் மொழி பிரச்னையை கிளப்புவதும், இனப்பிரச்னையை கிளப்புவதும் செய்கிறது. அவர்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காக, மற்றவர்களை தூண்டிவிட்டு மதப் பிரச்னையும், மொழி பிரச்னையும் வைத்து திமுக தப்பிக்க பார்க்கிறது" என பேசினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

கோடை வெயிலில் கருகும் சின்னமனூர் வெற்றிலை - கவலையில் விவசாயிகள்

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி, சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி நடைபெறுகிறது. இதில் பெரியகுளம்... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கம்: வேருடன் பிடுங்கி மறுநடவு; மீண்டும் உயிர் பெற்ற 50 வயது ஆலமரம்..!

தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலைய சாலை விரிவாக்க பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இதற்காக சாலையோரத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இந்த நிலையில் பழைய ஹவுசிங்யூனிட் அருகே 50 ஆண்... மேலும் பார்க்க

``போதைப்பொருள் பறிமுதலுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளது..'' - NIA சொல்வதென்ன?

குஜராத்தில் போதைப்பொருள் பறிமுதலுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) போலீஸார் தகவல் தெரிவித்திருக்கின்றனர். குஜராத் கடல் பகுதியில... மேலும் பார்க்க

தீவிரவாதிகளுக்கு ஆதரவு: ``அமெரிக்காவுக்காக மோசமான வேலையை செய்து வருகிறோம்'' - பாகிஸ்தான் அமைச்சர்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் இந்தியாவை அதிர்ச்சியடையச் செய்தது. இந்தத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என லஷ்கர் இ தொய்பாவும், பாகிஸ்தானும் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், ... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென சம்பந்தமில்லாமல் பேசும் மாமனார்.. சோடியம் குறைந்ததுதான் காரணமா?

Doctor Vikatan: என் மாமனாருக்கு 75 வயதாகிறது. கடந்த வாரம் திடீரென சம்பந்தமில்லாத விஷயங்களைஉளற ஆரம்பித்தார். இது எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. உடலில் சோடியம் அளவு குறைந்தால் இப்படித்தான... மேலும் பார்க்க

Trump: `பாகிஸ்தானுடனும் நான் நெருக்கமாக இருக்கிறேன், அதனால்..' -காஷ்மீர் தாக்குதல் குறித்து டிரம்ப்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் தாக்க... மேலும் பார்க்க