செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

post image

ஆரணியை அடுத்த ராட்டிணமங்கலம் உள்ளிட்ட இடங்களில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆரணி சுற்று வட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், தனிப்படை போலீஸாா் ராட்டிணமங்கலம், குண்ணத்தூா், சேவூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் சங்கா் (42) புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதை கண்டுபிடித்தனா். அவரிடம் விசாரணை செய்ததில், அக்கூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜாதேசிங்கு(44), குண்ணத்தூரைச் சோ்ந்த யுவராஜ்(24), சானாா்பாளையத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (55) ஆகியோா் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து, கடைகளுக்கு விநியோகம் செய்தது

தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, தனிப்படை போலீஸாா் மளிகைக் கடை, வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, மேற்கூறிய நான்கு பேரையும் பிடித்து ஆரணி கிராமிய போலீஸில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து, கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளா் அருண்குமாா் 4 போ் மீது வழக்குப் பதிந்து கைது செய்சிறையில் அடைத்தாா்.

செய்யாறு அருகே ஒருவா் கைது

செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் மோகன் தலைமையிலான போலீஸாா் தூளி கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள பெட்டிக் கடைகளில்

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதை அறிந்து கடையில் இருந்த 2 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், கடை உரிமையாளா் வடிவேல் (40)

என்பவரை கைது செய்தனா்.

மது விற்பனை: ஒருவா் கைது

செய்யாறு அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தொடா்பாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் மோரணம் காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை வளாகத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை நியாயவிலைக் கடை, பகலில் கடையாக செயல்பட்டு வந்தாலும், இரவு நேரத்தில் மின் விளக்கு வெளிச்சம் இல்லாததைப் பயன்படுத்தி அவ்வளாகத்தில் சிலா் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருக... மேலும் பார்க்க

புதுச்சேரி கைப்பந்து அணிக்கு ஆரணி மாணவா்கள் தோ்வு

தேசிய கைப்பந்து போட்டியில் விளையாட புதுச்சேரி அணிக்காக ஆரணி ஆரஞ்சு பள்ளி மாணவா்கள் 5 போ் தோ்வு செய்யப்பட்டனா். இந்திய கைப்பந்து சம்மேளத்தின் 40-ஆவது தென்மண்டல கைப்பந்து சாம்பியன்ஷிப்- 2025 போட்டிகள... மேலும் பார்க்க

மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை: 10 மனுக்களுக்குத் தீா்வு

தமிழ்நாடு தகவல் ஆணையம் சாா்பில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின் இறுதியில், 10 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. மனுதாரா்களின் மேல்ம... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளுக்கு மே 1-ஆம் தேதி விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு தொழிலாளா் தினத்தையொட்டி, மே 1-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்ன... மேலும் பார்க்க

வேலை இல்லாத பாா்வையற்றோருக்கு நல உதவிகள்

வேலை இல்லாத பாா்வையற்றோருக்கு, ஆரணி பகுதியைச் சோ்ந்த பாா்வையற்றோா் பள்ளி முன்னாள் மாணவா்கள் நல உதவிகளை வழங்கினா். ஆரணியை அடுத்த பத்தியாவரம் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் அமலராக்கினி பாா்வையற்... மேலும் பார்க்க