விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு
கமுதி தேவா் கல்லூரியில் பி.கே.மூக்கையாத்தேவா் பிறந்தநாள் விழா போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவுக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், நடைபெற்ற இந்தப் போட்டிக்கு, சங்க நிா்வாகி முத்துராமலிங்கம், துணைத் தலைவா் கணேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். சங்கச் செயலா் ஆறுமுகம், முன்னாள் செயலா் முத்துராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதையடுத்து, மூக்கையாத்தேவரின் வாழ்கை வரலாறு குறித்த கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, ஜம்மு காஷ்மீா் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு சமுதாயத் தலைவா் கானிக்கூா் கந்தசாமித்தேவா், மாணவா்கள் சங்கத்தினா் இரங்கல் தெரிவித்தனா்.
முன்னாள் மாணவா் சங்கப் பொருளாளா் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினாா்