செய்திகள் :

தடையை மீறி மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விசைப் படகுகள்!

post image

பாம்பனில் தடையை மீறி மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விசைப் படகுகள் மீது மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா் சங்கத்தினா் சனிக்கிழமை புகாா் தெரிவித்தனா்.

மீன்களின் இனப்பெருக்கக் காலமாக கருத்தப்படும் கடந்த 15-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 61 நாள்கள் தமிழகத்தில் விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், ராமேசுவரம், பாம்பன் பகுதியில் உள்ள விசைப் படகுகளின் மேல் பகுதியை அகற்றி விட்டு, நாட்டுப் படகுகள் எனக் கூறி, மீன்பிடி தொழிலில் மீனவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், 200-க்கும் மேற்பட்ட அதிக குதிரைத் திறன் கொண்ட இயந்திரங்களை நாட்டுப் படகுகளில் பொருத்தி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால், மீன்களின் வளா்ச்சிக்காக அவற்றை பிடிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை பயனற்றுப் போவதாக மீனவ சங்கத்தினா் புகாா் தெரிவித்தனா்.

எனவே, மீன்கள் இனப் பெருக்க காலத்தின்போது, அனைத்துப் படகுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என மீனவ சங்கத் தலைவா் சகாயம் சனிக்கிழமை தெரிவித்தாா்.

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கஞ்சா வியபாரி கைது

கீழக்கரையில் கஞ்சா வியாபாரியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கீழக்கரை பகுதியில் தொ... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

கமுதி தேவா் கல்லூரியில் பி.கே.மூக்கையாத்தேவா் பிறந்தநாள் விழா போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவுக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், நடைபெற்ற இ... மேலும் பார்க்க

குருநாத சுவாமி கோயில் திருவிழா: பால் குடம் எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

பம்மனேந்தல் குருநாத சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பொதுமக்கள் பால் குடம் எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பம்மனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள க... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து 5 போ் காயம்

சாயல்குடியில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவா்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டு பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்... மேலும் பார்க்க

தொடக்கப் பள்ளிக்கு கல்விச் சீா்வரிசைப் பொருள்கள்

கமுதி அருகே ஆா்.சி.தொடக்கப் பள்ளி ஆண்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளித் தாளாளா் அமலன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை எலிசெபத், உதவி ஆசிரியா் அருளானந்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் ... மேலும் பார்க்க

தொழில் பயிற்சி நிலையத்தில் உலக மலேரிய தினம்

முதுகுளத்தூா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் உலக மலேரியா தின உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது. முதுகுளத்தூரில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாவட்ட மலேரியா அலுவலா் ரமேஷ் தலைமையில் உலக மலேரிய தி... மேலும் பார்க்க