உச்சநீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட பள்ளிக் கல்வித் துறை ஊழியா்களுக்கு நித...
Vikatan Nambikkai Awards: `96 பாகம் 2 எழுதி முடிச்சிட்டேன்; PC ஸ்ரீராம் சார் கூட..!' - பிரேம்குமார்
ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் நம் விகடனின் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் `நம்பிக்கை விருதுகள்' விழா, இன்று (ஏப்ரல் 26) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகப் பயணத்தைக் தொடங்கி, `96', `மெய்யழகன்' என காதலையும், உறவுகளின் அன்பையும் திகட்டாதத் தேனாக விருந்தளித்த பிரேம் குமாருக்கு, `டாப் மனிதர்கள்' விருதளித்து பெருமைப்படுத்தியிருக்கிறது ஆனந்த விகடன்.

தனது மெய்யழகன் கார்த்தியின் தந்தை சிவகுமார் மற்றும் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி, ஸ்ரீராம் ஆகியோரின் கைகளால் விருதைப் பெற்றுகொண்டுப் பேசிய பிரேம் குமார், "என்னோட பிட்னஸ் ஸ்பிர்ட் சிவக்குமார் சார். உடல்நலனுக்கு மட்டுமல்லாது, மனதுக்கும்தான். 2D மெய்யழகன் பண்ணும்போது சார் கூடவே இருந்தாரு. என் வாழ்க்கையின் முக்கியமான உறவு சிவக்குமார் சார்" என்று சிவக்குமார் குறித்து நெகிழ்ந்தார்.
`96 பாகம் 2 எழுதி முடிச்சிட்டேன்’
தொடர்ந்து பி.சி ஸ்ரீராம் குறித்து, "சார் படிச்சா இன்ஸ்டிடியூட்லதான் நானும் படிச்சேன். சார்கூட ஒர்க் பண்றதுக்கு எல்லோருக்கும் ஆச இருக்கும். எனக்கு பயமும் கூட இருந்துச்சு. ஆனா, ஒருநாள் நான் டைரக்டர் ஆகிட்டு அவர்கிட்ட ஸ்க்ரிப்ட் கொடுப்பேன்னு நான் நெனைச்சதே இல்ல." என்று பேசியவர், "96 பாகம் 2 எழுதி முடிச்சிட்டேன். பி.சி.ஸ்ரீராம் சார் கூட ஒர்க் பண்ணப் போறேன்" என அடுத்த பட அப்டேட்டும் கொடுத்தார்.

முன்னதாக பேசிய பி.சி.ஸ்ரீராம், ``யாருனே தெரியாத ஒரு பையன் எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்தான். அத படிச்சிட்டு ஆடிட்டேன். அது ரொம்ப அழகாக இருந்தது. அந்த ஸ்க்ரிப்ட்டுக்கு அதுக்கு `ஹாப்பிமென்’ பேர் வச்சிருக்கலாம். அதுதான் மெய்யழகன். பிரேம் உண்மையான மெய்யழகன். அந்த ஸ்கிரிப் முழுமையா அப்படியே வச்சிருக்கேன். பிரேம் வளரும் கலைஞன்" என்று பிரேம்குமாரை வாழ்த்தி, "96 பாகம் 2 நான் பண்ண போறேன்" என்ற அப்டேட்டும் கொடுத்தார்.