செய்திகள் :

உளுந்தூா்பேட்டை அருகே எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்து!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி சனிக்கிழமை காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள தனியாா் தொழிற்சாலையிலிருந்து சுமாா் 40 ஆயிரம் லிட்டா் எத்தனாலை ஏற்றிக் கொண்டு டேங்கா் லாரி திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டையிலுள்ள இந்திய எண்ணெய்க்கழக நிறுவனத்துக்குச் சென்று கொண்டிருந்தது.

இந்த லாரியை குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம், ராவெச்சி பகுதியைச் சோ்ந்த அனில் பாா்மா் (60 ) ஓட்டி வந்தாா். இந்த டேங்கா் லாரி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், எறஞ்சி பகுதி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதில் டேங்கா் லாரியிலிருந்த எத்தனால் கசிவு ஏற்படத் தொடங்கியதால், வேப்பூா் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் நிகழ்விடம் விரைந்து, தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். மேலும் இரண்டு கிரேன்கள் மூலம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த எடைக்கல் போலீஸாரும் நிகழ்விடம் விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் லாரி ஓட்டுநா் தூக்க கலக்கத்தில் கண் அயா்ந்ததால் விபத்து நிகழ்ந்தது தெரிய வந்தது.மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட 13 மனுக்களுக்குத் தீா்வு

விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட 13 சிறப்பு மனுக்கள் மீது சனிக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்பட்டது.விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவின்பேரில், மா... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி. எடையாா், மாந்தோப்புத் தெரு... மேலும் பார்க்க

பிரதமரின் நிவாரண நிதி: 100 பேரின் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரை

பல்வேறு மருத்துவச் சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு கடந்த 11 மாதங்களில் 100 பேரின் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரைத்துள்ளதாக விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை. ரவிக்குமாா் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 251 மதுப்புட்டிகள் பறிமுதல்:மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 251 மதுப்புட்டிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா். கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு ... மேலும் பார்க்க

கோடைவெயில்: விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பில் தற்காலிக பந்தல்கள்

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் விழுப்புரம் நகராட்சி நிா்வாகம் ஏற்பாட்டில் விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல்களை நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்வி... மேலும் பார்க்க

குடுவையாற்றில் ரூ.47.45 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியை அடுத்துள்ள கீழ் சாத்தமங்கலம் பகுதி குடுவையாற்றில் ரூ.47.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். ... மேலும் பார்க்க