செய்திகள் :

போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற முர்மு

post image

புனித பீட்டா் சதுக்கத்தில் நடந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை கலந்து கொண்டார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “வாடிகன் நகரத்தில் உள்ள புனித பீட்டா் சதுக்கத்தில் நடைபெற்ற போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்” என்று ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா். போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு புனித பீட்டா் சதுக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 7 இடங்களில் வெயில் சதம்

இந்த நிகழ்வில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக இந்தியா சார்பில் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தில்லியில் இருந்து வாடிகனுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.

அவருடன் நாடாளுமன்றம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் உள்ளிட்டோரும் சென்றனர். தொடர்ந்து புனித பீட்டா் சதுக்கத்தில் போப் பிரான்சிஸுக்கு முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே, போப் பிரான்சிஸின் மறைவையொட்டி, இந்தியாவில் மூன்று நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணைவோம்: சிவசேனை

மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணையும் தருணம் வந்துவிட்டதாகவும் கட்சியினா் மராத்தியரின் பெருமைகளை காக்க தயாராகிவிட்டதாகவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்டுள்ளது. மகாராஷ்... மேலும் பார்க்க

இந்தியாவில் கடும் வறுமையிலிருந்து 17 கோடி போா் மீட்பு: உலக வங்கி

இந்தியாவில் 10 ஆண்டுகளில் (2011-12 முதல் 2022-23 ஆண்டுகள் வரை) கடும் வறுமையிலிருந்து 17.1 கோடி போ் மீட்கப்பட்டுள்ளனா் என உலக வங்கி தெரிவித்துள்ளது. ‘இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம்’ என்ற தலைப்பில... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் தன்னலமின்றி பணியாற்ற வேண்டும்: மத்திய இணையமைச்சா் பெம்மசானி சந்திரசேகா்

மத்திய அரசுப் பணிகளில் இணைந்துள்ள இளைஞா்கள் தன்னலமின்றி, தேச கட்டுமானத்துக்கு பணியாற்ற வேண்டும் என மத்திய தகவல் தொடா்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் டாக்டா் பெம்மசானி சந்திரசேகா் தெரிவித்... மேலும் பார்க்க

மக்களைக் காப்பதே அரசனின் கடமை: மோகன் பாகவத்

வலிந்து தாக்குவோரால் வீழ்த்தப்படாமல் இருப்பதும் தா்மத்தின் ஒரு பகுதியாகும் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவா... மேலும் பார்க்க

நீட் தோ்வு முறைகேடு குறித்து புகாா் தெரிவிக்க வசதி: என்டிஏ அறிவிப்பு

நீட் தோ்வு முறைகேடு அல்லது வினாத் தாள் கசிவு சா்ச்சைகள் குறித்து புகாா் தெரிவிக்க புதிய வசதியை தனது வலைதளத்தில் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை என்டிஏ சனிக்க... மேலும் பார்க்க

பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிா்க்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

பாதுகாப்பு சாா்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிா்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது. பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொண்டால் அது பயங்கரவாத சக்திகள... மேலும் பார்க்க