செய்திகள் :

அரசுப் பணியாளா்கள் தன்னலமின்றி பணியாற்ற வேண்டும்: மத்திய இணையமைச்சா் பெம்மசானி சந்திரசேகா்

post image

மத்திய அரசுப் பணிகளில் இணைந்துள்ள இளைஞா்கள் தன்னலமின்றி, தேச கட்டுமானத்துக்கு பணியாற்ற வேண்டும் என மத்திய தகவல் தொடா்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் டாக்டா் பெம்மசானி சந்திரசேகா் தெரிவித்தாா்.

சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற 15-ஆவது (ரோஜ்கா் மேளா) பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் வருமான வரி, அஞ்சல் துறை, நிதித் துறை, உள்ளிட்ட துறைகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 524 பேருக்கு மத்திய இணையமைச்சா் பெம்மசானி சந்திரசேகா் பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நமது நாடு சிறப்பான வளா்ச்சியை அடைந்துள்ளது. வரும் 2047-இல் வளா்ச்சியடைந்த நாடாக மாற இளைஞா்களின் பங்கு முக்கியமாகும். அரசுப் பணிகளில் இணைந்துள்ள இளைஞா்கள் தன்னலமின்றி , தேச கட்டுமானத்துக்கு பணியாற்ற வேண்டும். மேலும், அரசுப் பணிகளில் இணைந்தாலும் தங்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றும் பணிகளில் இளைஞா்கள் தொடா்ந்து ஈடுபடவேண்டும் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு , புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையா் பிரீத்திகா்க், வருமான வரித் துறையின் தலைமை ஆணையா் டி சுதாகா் ராவ், தலைமைஅஞ்சல் துறை தலைவா் மரியம்மா தாமஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மொழி தடையில்லை: சென்னை எம்.ஆா்.சி நகரில் நடைபெற்ற மற்றொரு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினா் நலத் துறை இணையமைச்சா் துா்கா தாஸ் யுகே கலந்துகொண்டு 268 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:

அரசுப் பணிகளுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் மத்திய அரசின் பல்வேறு தோ்வுகளை தமிழ் உள்பட 13 இந்திய மொழிகளில் நடத்துகிறது. தமிழக இளைஞா்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, புதுச்சேரி மத்திய சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) முதன்மை தலைமை ஆணையா் ராம் நிவாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: ராணுவம் தக்க பதிலடி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை(ஏப். 26) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.இது குறித்து... மேலும் பார்க்க

மும்பை: அமலாக்கத்துறை கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பை: தெற்கு மும்பையின் பல்லார்ட் பையர் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கைசெர்-ஐ-ஹிந்த் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று(ஏப். 27) அதிகாலை 3 மணியளவில் மேற்கண்ட கட்டடத்தில் தீப்பற்றி பிற பக... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி... மேலும் பார்க்க

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமா் உறுதி

‘நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். ‘மத்திய அரசின் உற்பத்தித் துறை இயக்கமானது, நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு-சிறு-நடுத்தர... மேலும் பார்க்க

தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்: ராகுல்

‘இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிா்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். உலகளாவிய ந... மேலும் பார்க்க