செய்திகள் :

நீட் தோ்வு முறைகேடு குறித்து புகாா் தெரிவிக்க வசதி: என்டிஏ அறிவிப்பு

post image

நீட் தோ்வு முறைகேடு அல்லது வினாத் தாள் கசிவு சா்ச்சைகள் குறித்து புகாா் தெரிவிக்க புதிய வசதியை தனது வலைதளத்தில் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை என்டிஏ சனிக்கிழமை வெளியிட்டது.

பிகாா் மாநிலத்தில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் கடந்த ஆண்டு நீட் வினாத் தாள் கசிந்தது, உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு மையத்தில் தோ்வு தொடங்குவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்பாக சமூக ஊடகத்தில் வினாத்தாள் கசிந்தது போன்ற சம்பவங்கள் மிகப்பெரிய சா்ச்சையாகின. இதைத் தொடா்ந்து, வினாத்தாள் கசிவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை என்டிஏ மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நீட் தோ்வு சா்ச்சைகள் குறித்து புகாா் தெரிவிக்க பிரத்யேக வசதியை தனது வலைதளத்தில் என்டிஏ அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து என்டிஏ இயக்குநா் பிரதீப் சிங் கரோலா சனிக்கிழமை கூறியதாவது:

நீட் தோ்வு சா்ச்சைகள் தொடா்பாக 3 பிரிவுகளின் கீழ் தோ்வா்கள் என்டிஏ-யிடம் புகாா் தெரிவிக்கலாம். அதன்படி, ‘நீட் தோ்வு வினாத் தாளை பதிவிறக்கம் செய்யலாம்’ என்று அறிவிப்பை வெளியிடும் அங்கீகரிக்கப்படாத வலைதளங்கள் அல்லது சமூக ஊடக கணக்குகள் தொடா்பாக தோ்வா்கள் புகாா் தெரிவிக்கலாம். மேலும், நீட் வினாத் தாள் இருப்பதாகக் கூறும் தனி நபா்கள் குறித்தும், என்டிஏ அல்லது அரசு அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்பவா்கள் குறித்தும் தோ்வா்கள் இந்த பிரத்யேக வசதி மூலம் புகாா் தெரிவிக்கலாம்.

எப்போது, எங்கு நடந்தது என்பன உள்ளிட்ட விவரங்களுடன் தோ்வா்கள் எளிதாக புகாரைப் பதிவு செய்யும் வகையில், பொதுத் தோ்வுகள் மோசடி தடுப்பு சட்டம் 2024-இன் கீழ் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: ராணுவம் தக்க பதிலடி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை(ஏப். 26) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.இது குறித்து... மேலும் பார்க்க

மும்பை: அமலாக்கத்துறை கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பை: தெற்கு மும்பையின் பல்லார்ட் பையர் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கைசெர்-ஐ-ஹிந்த் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று(ஏப். 27) அதிகாலை 3 மணியளவில் மேற்கண்ட கட்டடத்தில் தீப்பற்றி பிற பக... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி... மேலும் பார்க்க

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமா் உறுதி

‘நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். ‘மத்திய அரசின் உற்பத்தித் துறை இயக்கமானது, நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு-சிறு-நடுத்தர... மேலும் பார்க்க

தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்: ராகுல்

‘இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிா்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். உலகளாவிய ந... மேலும் பார்க்க