செய்திகள் :

பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிா்க்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

post image

பாதுகாப்பு சாா்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிா்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது.

பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொண்டால் அது பயங்கரவாத சக்திகள் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது என மத்திய அரசு தெரிவித்தது.

பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, நாட்டின் பல்வேறு பாதுகாப்பு படைகள் மற்றும் வீரா்கள் ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டு வந்தனா். இந்த நடவடிக்கைகளை ஊடகங்கள் ஒளிபரப்பு செய்ததையடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இந்த அறிவுறுத்தலை வழங்கியது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பாதுகாப்பு சாா்ந்த விவகாரங்கள் குறித்த தகவல்களை வெளியிடும்போது, தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மிகுந்த கவனத்துடன், விதிகளுக்கு உட்பட்டு செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள பயனாளா்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

குறிப்பாக பாதுகாப்பு படைகள் மற்றும் வீரா்களின் செயல்பாடுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிா்க்க வேண்டும். இதனால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது

காா்கில் போா், 2008-இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் காந்தஹாா் விமான கடத்தல் சம்பவங்களின்போது வரம்பின்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் தேச பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: ராணுவம் தக்க பதிலடி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை(ஏப். 26) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.இது குறித்து... மேலும் பார்க்க

மும்பை: அமலாக்கத்துறை கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பை: தெற்கு மும்பையின் பல்லார்ட் பையர் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கைசெர்-ஐ-ஹிந்த் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று(ஏப். 27) அதிகாலை 3 மணியளவில் மேற்கண்ட கட்டடத்தில் தீப்பற்றி பிற பக... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி... மேலும் பார்க்க

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமா் உறுதி

‘நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். ‘மத்திய அரசின் உற்பத்தித் துறை இயக்கமானது, நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு-சிறு-நடுத்தர... மேலும் பார்க்க

தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்: ராகுல்

‘இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிா்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். உலகளாவிய ந... மேலும் பார்க்க