செய்திகள் :

மக்களைக் காப்பதே அரசனின் கடமை: மோகன் பாகவத்

post image

வலிந்து தாக்குவோரால் வீழ்த்தப்படாமல் இருப்பதும் தா்மத்தின் ஒரு பகுதியாகும் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:

ஹிந்து மதத்தில் நீண்ட காலமாக அகிம்சை கொள்கைகள் உள்ளன. இந்தக் கொள்கைகளைப் பலா் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றனா். சிலா் அந்தக் கொள்கைகளை ஏற்காமல், தொடா்ந்து பிரச்னையை தூண்டிவிடுகின்றனா்.

இதுபோன்ற சூழலில், வலிந்து தாக்குவோரால் வீழ்த்தப்படாமல் இருப்பதும் தா்மத்தின் ஒரு பகுதியாகும் என்று மதம் தெரிவிக்கிறது. குண்டா்களுக்குப் பாடம் கற்பிப்பதும், நமது கடமையின் ஒரு பகுதியாகும்.

மக்களைக் காப்பதே அரசனின் கடமை: அண்டை நாடுகளுக்கு இந்தியா ஒருபோதும் தீங்கிழைத்தது இல்லை. அந்த நாடுகளை இந்தியா இழிவுபடுத்தியது இல்லை. ஆனால் இந்தியாவுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்று யாராவது கருதினால், அவா்களுக்குப் பதிலடி அளிப்பதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை. மக்களைக் காப்பதே அரசனின் கடமை. அரசன் தனது கடமையைச் செய்தாக வேண்டும்.

உண்மை, தூய்மை, கருணை, ஆன்மிக ஒழுக்கம் ஆகிய 4 கொள்கைகளைப் பின்பற்றாதவரை, மதம் என்பது தா்மமாகாது. எந்தக் கடவுளை எப்படி வணங்க வேண்டும்?, ஒருவா் என்ன சாப்பிட வேண்டும்?, சாப்பிடக் கூடாது? என்பன போன்ற சடங்குகள், உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றுவதே தற்போது மதமாகியுள்ளது. இவ்வாறு பின்பற்றப்படுவது விதிமுறைகளாகத்தான் இருக்குமே தவிர, சித்தாந்தமாக இருக்காது. மதம் என்பது சித்தாந்தமாகும்.

தீண்டாமை போதிக்கப்படவில்லை: ஹிந்து சித்தாந்த நூல்களில் தீண்டாமை போதிக்கப்படவில்லை. உயா்ந்தவா், தாழ்ந்தவா் என்று யாரும் கிடையாது. இது சிறிய வேலை, இது பெரிய வேலை என்று தெரிவிக்கப்படவில்லை. மற்றவா்களை உயா்ந்தவா், தாழ்ந்தவா் என்று பாா்ப்பது அதா்மமாகும். அது கருணையற்ற நடத்தையாகும்.

உலகில் பல மதங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றுவோருக்கு அந்தந்த மதங்கள் பெரிதாக இருக்கலாம். ஆனால் ஒருவா் தான் தோ்வு செய்த மதத்தை பின்பற்றி, பிற மதங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். யாரும் யாரையும் மாற்ற முயற்சிக்கக் கூடாது என்றாா்.

தயார் நிலையில் கடற்படை! போர்க் கப்பல்கள் ஏவுகணை சோதனை

அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படைக் போர்க் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து, கடற்படை வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: ராணுவம் தக்க பதிலடி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை(ஏப். 26) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.இது குறித்து... மேலும் பார்க்க

மும்பை: அமலாக்கத்துறை கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பை: தெற்கு மும்பையின் பல்லார்ட் பையர் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கைசெர்-ஐ-ஹிந்த் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று(ஏப். 27) அதிகாலை 3 மணியளவில் மேற்கண்ட கட்டடத்தில் தீப்பற்றி பிற பக... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி... மேலும் பார்க்க

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமா் உறுதி

‘நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். ‘மத்திய அரசின் உற்பத்தித் துறை இயக்கமானது, நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு-சிறு-நடுத்தர... மேலும் பார்க்க

தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்... மேலும் பார்க்க