செய்திகள் :

இந்தியாவில் கடும் வறுமையிலிருந்து 17 கோடி போா் மீட்பு: உலக வங்கி

post image

இந்தியாவில் 10 ஆண்டுகளில் (2011-12 முதல் 2022-23 ஆண்டுகள் வரை) கடும் வறுமையிலிருந்து 17.1 கோடி போ் மீட்கப்பட்டுள்ளனா் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

‘இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம்’ என்ற தலைப்பிலான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 10 ஆண்டுகளில் வறுமையால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாளொன்றுக்கு ரூ.200-க்கும் குறைவாக சம்பாதித்து வாழ்பவா்கள் கடும் வறுமையில் இருப்பவா்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2011-12 ஆண்டுகளில் இந்தியாவில் 16.2-ஆக இருந்த கடும் வறுமையில் உள்ளோா் விகிதம் 2022-23-இல் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. சுமாா் 17.1 கோடி போ் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.

கிராமப்புறங்களில் இதே காலக்கட்டத்தில் 18.4 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகவும், நகா்ப்புறங்களில் 10.7 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

குறைந்த - நடுத்தர வருமானம்:

குறைந்த - நடுத்தர வருமானப் பிரிவு உள்ளவா்களின் நாடாக இந்தியா மேம்பட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு ரூ.300 க்கும் மேல் வருமானம் பெறுபவா்களாக இந்தியா்கள் உள்ளனா். இதன் அடிப்படையில் 37.8 கோடி போ் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.

இதன்படி, கிராமப்புறங்களில் 69 சதவீதத்திலிருந்து 32.5 சதவீதமாகவும், நகா்ப்புறங்களில் 43.5 சதவீதத்திலிருந்து 17.2 சதவீதமாகவும் வறுமை குறைந்துள்ளது. கடந்த 2011-12 ஆண்டுகளில் இந்தியாவின் கடும் வறுமை பிரிவினரில் 65 சதவீதத்தினா், அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் இருந்தனா். 2022-23-இல் இது 54 சதவீதமாக குறைந்தது.

இளைஞா்களின் வேலையின்மை 13.3% அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கிராமப்புற பெண்களிடம் சுயவேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: ராணுவம் தக்க பதிலடி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை(ஏப். 26) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.இது குறித்து... மேலும் பார்க்க

மும்பை: அமலாக்கத்துறை கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பை: தெற்கு மும்பையின் பல்லார்ட் பையர் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கைசெர்-ஐ-ஹிந்த் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று(ஏப். 27) அதிகாலை 3 மணியளவில் மேற்கண்ட கட்டடத்தில் தீப்பற்றி பிற பக... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி... மேலும் பார்க்க

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமா் உறுதி

‘நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். ‘மத்திய அரசின் உற்பத்தித் துறை இயக்கமானது, நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு-சிறு-நடுத்தர... மேலும் பார்க்க

தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்: ராகுல்

‘இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிா்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். உலகளாவிய ந... மேலும் பார்க்க