செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி விடுதியில் மாணவர் மர்ம மரணம்.. போலீஸார் விசாரணை!

post image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளியூர், வெளி மாநில மாணவர்கள் தங்கி பயில கல்லூரியில் ஆண், பெண் தனித்தனி விடுதி உள்ளது.

அதன்படி, பல்கலைக்கழகத்தில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நெளபடா ஹர்சித் என்ற 19 வயது மாணவன் பி.டெக் (சிஎஸ்சி) முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

யுனிவர்சிட்டி

இந்தநிலையில், மாணவன் ஹர்சித், வழக்கம்போல வகுப்பறைக்கு வந்தவர், திடீரென கல்லூரி விடுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் சிறிது நேரத்திலேயே மாணவன் ஹர்சித், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் தீயாய் பரவியது.

இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணன்கோவில் போலீஸார், மாணவர் ஹர்சித்தின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

முதலாம் ஆண்டு மாணவர் நௌபடா ஹர்சித், தற்கொலை செய்தது தொடர்பாக அவரின்‌ உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் இறப்பு கொலையா?, தற்கொலையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஹர்சித்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செயல்பட்டு வரும் இந்த தனியார் பல்கலைக்கழகத்தில், தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை சம்பவம் அடிக்கடி நடப்பது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையொட்டி, கல்லூரி தரப்பில் மாணவர்களுக்கு ஏதும் அழுத்தம் தரப்படுகிறதா? என்று விடுதி மற்றும் கல்வி குறித்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவேண்டும், மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை தவிர்ப்பதற்கு முறையான கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`பணத்துக்காக 25 வயது மூத்த பெண்ணுடன் ரகசிய திருமணம்..' - கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள குன்னத்துகால் பகுதியைச் சேர்ந்த ஷாகா குமாரி, நெய்யாற்றின்கரை பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவர்,52 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.... மேலும் பார்க்க

தென்காசி: சொத்துவரி ரசீது கொடுக்க ரூ.15000 லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது!

சொத்துவரி போட்டுத் தருவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடுகப்பட்டி, தெற்குசத்திரத்தை சேர்ந்தவர் காளிராஜன் (வ... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி - தொழிலதிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு

பட்டுக்கோட்டை அருகே உள்ள வீரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அருள் சூசை(55). திருமணம் ஆனவர். தொழில் அதிபரான இவர் துபாய் நாட்டில் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இவருக்கு சொந்தம... மேலும் பார்க்க

`Real Dragon' நேர்முகத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து `IT வேலை' பெற்ற நபர் - சிக்கியது எப்படி?

இந்த ஆண்டு வெளியான டிராகன் படத்தில் வருவதுபோல தெலங்கானாவைச் சேர்ந்த இளம் இஞ்சினியர் ஒருவர் நேர்முகத்தேர்வில் மோசடி செய்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளார்.ஆன்லைன் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற... மேலும் பார்க்க

திருப்பூர் அரசு மருத்துவமனை: சிகிச்சைக்குப் பயந்த இளைஞர்; 4-வது மாடியில் இருந்து குதித்து பலி

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விபாஸ் பன்வான்(30). இவர், மேற்கு வங்கத்தில் இருந்து கேரளத்துக்கு பணிக்குச் செல்வதற்காக ரயிலில் வந்துள்ளார். திருப்பூர் அருகே கூலிபாளையம் ரயில் நிலையத்தில், ரயில் வந்த... மேலும் பார்க்க

``எல்லா வலியை தாங்கியும் அது நடக்கல..'' - கீர்த்திகா உடலை பார்த்து அக்கா, தம்பி கதறிய சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு (55) பட்டியலினத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு துர்கா (34), மேனகா (29), கீர்த்திகா (27), தினேஷ... மேலும் பார்க்க