செய்திகள் :

`Real Dragon' நேர்முகத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து `IT வேலை' பெற்ற நபர் - சிக்கியது எப்படி?

post image

இந்த ஆண்டு வெளியான டிராகன் படத்தில் வருவதுபோல தெலங்கானாவைச் சேர்ந்த இளம் இஞ்சினியர் ஒருவர் நேர்முகத்தேர்வில் மோசடி செய்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளார்.

ஆன்லைன் நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவதற்காக தனக்கு பதிலாக மற்றொரு நபரை ஆள் மாறாட்டம் செய்து பங்கு பெறச் செய்துள்ளார்.

Virtual Interview
Virtual Interview (Representative)

Dragon பட பாணியில் மோசடி

ராபா சாய் பிரசாத் என்ற நபரின் வேலை தேடும் தளம் வழியாக அனுப்பிய ஆவணங்கள், சம்பரதா மென்பொருள் தொழில்நுட்பங்கள் என்ற ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் சிவ பிரகாஷ் என்பவரால் சரிபார்க்கப்பட்டு இன்ஃபோஸிஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நேர்முகத்தேர்வை அடுத்து பிரசாத், ஜனவரி 20, 2025 அன்று தனது இணைப்பு கடிதத்தை பெற்றுள்ளார். பின்னர் பணியில் சேர்ந்துள்ளார்.

மாட்டிவிட்ட இங்கிலீஷ்

அலுவலகத்தில் பிரசாத் நேர்முகத்தேர்வில் இருந்ததை விட வித்தியாசமாக பேசியதால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. நல்ல கல்விப் பின்புலம் இருந்தாலும், அவரது கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மோசமாக இருந்துள்ளது.

IT Job (Representative)
IT Job (Representative)

நேர்முகத் தேர்வில் சரளமாக ஆங்கிலம் பேசியவர், நேரில் வந்ததும் திணறியதால் அவர் மிது அலுவலக ரீதியில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இன்ஃபோசிஸ் மனித வள அலுவலர் நேர்முகத் தேர்வின் ஸ்கிரீன் ஷாட்களையும் அவரது புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஆள்மாறாட்ட மோசடி நடந்திருக்கிறது ன்பதைக் கண்டறிந்துள்ளார்.

வேலையில் இருந்து நிறுத்தப்பட்டு ஹைத்ராபாத்துக்கு திரும்பியுள்ளார் பிரசாத். மோசடியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், சிக்கிய பிறகு அலுவலகத்தில் 15 நாள்கள் பணியாற்றியதற்கான இழப்பீடு வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

காவல்துறையினர் அவர் மீது ஐடி சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 318 (மோசடி) மற்றும் 319 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனை: சிகிச்சைக்குப் பயந்த இளைஞர்; 4-வது மாடியில் இருந்து குதித்து பலி

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விபாஸ் பன்வான்(30). இவர், மேற்கு வங்கத்தில் இருந்து கேரளத்துக்கு பணிக்குச் செல்வதற்காக ரயிலில் வந்துள்ளார். திருப்பூர் அருகே கூலிபாளையம் ரயில் நிலையத்தில், ரயில் வந்த... மேலும் பார்க்க

``எல்லா வலியை தாங்கியும் அது நடக்கல..'' - கீர்த்திகா உடலை பார்த்து அக்கா, தம்பி கதறிய சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு (55) பட்டியலினத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு துர்கா (34), மேனகா (29), கீர்த்திகா (27), தினேஷ... மேலும் பார்க்க

TASMAC: போதையில் கோஷ்டி மோதல்; மது பாட்டிலால் அடித்து இளைஞர் படுகொலை.. திருச்சியில் அதிர்ச்சி

திருச்சி, கோட்டை காவல் சரகத்திற்கு உள்பட்ட தேவதானம் பகுதியில் அரசு மதுபான கடையோடு இணைந்த பார் ஓன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் சஞ்சீவி நகரைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரது மகன் கற்குவேல் (வயது: 44) ... மேலும் பார்க்க

புதுச்சேரி அதிகாரியிடம் அந்தரங்க வீடியோவைக் காட்டி மிரட்டல்; 3 பெண்கள் கைது; பின்னணி என்ன?

புதுச்சேரி மின்துறையில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் கடந்த சில நாட்களாக இளம்பெண் ஒருவருடன் செல்போனில் பேசி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில், இருவரும் சந்திக்கலாம் என முடிவு... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நண்பன்; கொன்று வீட்டில் புதைத்த அண்ணன்; என்ன நடந்தது?

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நம்புராஜன். மீன்பிடித்தல் உள்ளிட்ட கூலி வேலை செய்து வருபவர்.இவரைக் கடந்த மார்ச் 30-ம் தேதி முதல் காணவில்லை என அவரது சகோதரி ராணி என்பவர், சில நாட்களுக்க... மேலும் பார்க்க

Pahalgam Attack : சிறுவயது நண்பர்களின் முதல் பயணம்... இறுதிப்பயணமாக மாறிய சோகம் - நடந்தது என்ன?

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் மும்பை டோம்பிவலியை சேர்ந்த சஞ்சய் லீலா, அதுல் மோனே, ஹேமந்த் ஜோஷி ஆகியோர் உயிரிழந்தனர்.... மேலும் பார்க்க