செய்திகள் :

ராமேஸ்வரம்: தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நண்பன்; கொன்று வீட்டில் புதைத்த அண்ணன்; என்ன நடந்தது?

post image

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நம்புராஜன். மீன்பிடித்தல் உள்ளிட்ட கூலி வேலை செய்து வருபவர்.

இவரைக் கடந்த மார்ச் 30-ம் தேதி முதல் காணவில்லை என அவரது சகோதரி ராணி என்பவர், சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீஸார், காணாமல் போன நம்புராஜன் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் போது நம்புராஜன் தனது நண்பரான வெங்கடேசனுடன் சேர்ந்து குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் விசயம் தெரியவந்தது.

கொலை நடந்த இடத்தில் போலீஸ் விசாரணை

இதையடுத்து ராமேஸ்வரம் வெண்மணி நகர்ப் பகுதியைச் சேர்ந்த மீன்பிடி கூலியான வெங்கடேஷனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது நம்புராஜனை அடித்துக் கொன்று தனது வீட்டில் புதைத்த அதிர்ச்சி தகவலை வெங்கடேஷ் போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வெங்கடேஷின் வீட்டிற்குச் சென்ற போலீஸார், அங்குப் புதைக்கப்பட்டிருந்த நம்புராஜனின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

போலீஸார் விசாரணையில், நண்பர்களாக இருந்த வெங்கடேஷும் நம்புராஜனும் தினமும் ஒன்றாகச் சேர்ந்து மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதற்காக நம்புராஜன், வெங்கடேஷின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வெங்கடேஷ் வீட்டில் இல்லாத போது அங்கு வந்த நம்புராஜன், வெங்கடேஷின் தங்கையிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

அந்நேரம் வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் இதனைப் பார்த்தது அதிர்ச்சியடைந்ததுடன், ஆத்திரத்துடன் நம்புராஜனைத் தாக்கியுள்ளார்.

கொலையாளி வெங்கடேஷ்

அப்போது இருவருக்கும் இடையே நடந்த மோதலில் வெங்கடேஷ், நம்புராஜனைச் சுவரில் மீது பிடித்துத் தள்ளியதில் நம்புராஜனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனால் பதற்றம் அடைந்த வெங்கடேஷ், நம்புராஜனின் உடலை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டின் அருகிலேயே புதைத்துவிட்டு ஏதும் நடக்காது போல் வெளியில் நடமாடியுள்ளார்.

இந்நிலையில் போலீஸார் விசாரணையின் போது சிக்கிக் கொண்ட வெங்கடேஷைக் கைது செய்த போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

புதுச்சேரி அதிகாரியிடம் அந்தரங்க வீடியோவைக் காட்டி மிரட்டல்; 3 பெண்கள் கைது; பின்னணி என்ன?

புதுச்சேரி மின்துறையில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் கடந்த சில நாட்களாக இளம்பெண் ஒருவருடன் செல்போனில் பேசி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில், இருவரும் சந்திக்கலாம் என முடிவு... மேலும் பார்க்க

Pahalgam Attack : சிறுவயது நண்பர்களின் முதல் பயணம்... இறுதிப்பயணமாக மாறிய சோகம் - நடந்தது என்ன?

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் மும்பை டோம்பிவலியை சேர்ந்த சஞ்சய் லீலா, அதுல் மோனே, ஹேமந்த் ஜோஷி ஆகியோர் உயிரிழந்தனர்.... மேலும் பார்க்க

சென்னை: பெட்டிக்கடை பெண்ணிடம் செயின் பறிப்பு; கைவரிசை காட்டிய தம்பதியை மடக்கிப் பிடித்த மக்கள்!

சென்னை கே.கே.நகர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரின் மனைவி காந்தா (52). இவர்கள் மணப்பாக்கம், பார்த்தசாரதி நகரில் காய்கறி, கூல்டிரிங்க்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 22-ம் தேத... மேலும் பார்க்க

கேரள தொழிலதிபர் மனைவியுடன் கோடாரியால் வெட்டி கொலை; அஸ்ஸாம் இளைஞரிடம் விசாரணை; பின்னணி என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் திருவாதக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலதிபரான விஜயகுமாரும் அவரது மனைவி மீராவும் பெரிய பங்களாவில் வசித்துவந்தனர்.இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 22) காலை அவரது வீட்டுக்கு வ... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி; கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்; பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.அப்போது, நம்மிடம் பேசியவர்கள், ... மேலும் பார்க்க

Elephant: ``சுற்றுலா பயணிகளின் அத்துமீறலால் பரிதாபமாக உயிரிழந்த பெண்..'' - வனத்துறை சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுமார் 55 வயதான சரசு. தபால்துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த இவர் தன்னுடைய கணவருடன் நேற்று முன்தினம் மாலை பொக்காபுரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு ... மேலும் பார்க்க