செய்திகள் :

Elephant: ``சுற்றுலா பயணிகளின் அத்துமீறலால் பரிதாபமாக உயிரிழந்த பெண்..'' - வனத்துறை சொல்வதென்ன?

post image

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுமார் 55 வயதான சரசு. தபால்துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த இவர் தன்னுடைய கணவருடன் நேற்று முன்தினம் மாலை பொக்காபுரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சாலையில் தென்பட்ட யானை ஒன்று ஸ்கூட்டரை தள்ளிவிட்டு தாக்கியதில் சரசுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

ஸ்கூட்டர்

கணவர் குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார். காயத்துடன் தவித்த சரசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சரசு அன்றைய தினம் இரவு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சோகம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் அத்துமீறலால் தான் இந்த துயரம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்துள்ள முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், "முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட மசினகுடி, பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் என்பது இயல்பான ஒன்றுதான்.

உள்ளூர் மக்களைப் பொறுத்தவரை பாதுகாப்பான முறையிலேயே பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதேப்போன்று தான் அன்றைய தினம் மாலையும் பொக்காபுரம் சாலையில் யானை நடமாட்டம் இருந்துள்ளது.

யானயைக் கண்ட சுற்றுலா பயணிகள் சிலர் வாகனங்களை சாலையின் நடுவில் நிறுத்தி செல்போனில் படம் பிடித்திருக்கிறார்கள். ஒருவரைப் பார்த்து மற்றொருவர் என அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

யானை

கோபமடைந்த யானை வாகனங்களை விரட்டி ஆரம்பிக்க, சரசின் ஸ்கூட்டரை விரட்டியிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை மீறி அங்கிருந்து ஸ்கூட்டரில் தப்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட, எட்டிப்பிடித்து ஸ்கூட்டரை தாக்கியிருக்கிறது. வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அறிவிப்பு பதாகைகள் வைத்தும் அபராதம் விதித்தும் வருகிறோம்.

சில சுற்றுலா பயணிகள் எதையும் மதிப்பதில்லை. சுற்றுலா பயணிகளின் இந்த அத்துமீறலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் சரசு. வனப்பகுதிகளின் ஊடாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் " என்றனர்.

கேரள தொழிலதிபர் மனைவியுடன் கோடாரியால் வெட்டி கொலை; அஸ்ஸாம் இளைஞரிடம் விசாரணை; பின்னணி என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் திருவாதக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலதிபரான விஜயகுமாரும் அவரது மனைவி மீராவும் பெரிய பங்களாவில் வசித்துவந்தனர்.இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 22) காலை அவரது வீட்டுக்கு வ... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி; கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்; பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.அப்போது, நம்மிடம் பேசியவர்கள், ... மேலும் பார்க்க

`16-ம் தேதி திருமணம்.. 22-ம் தேதி கடற்படை அதிகாரி பலி' - ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் நடந்த கொடூரம்

ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் பணியில் சேர்ந்தார்.இவருக்கு கடந்த 16-ம் தேதி திருமணமும், 19-ம் தேதி திரும... மேலும் பார்க்க

Jammu - Kashmir: உளவுத்துறை அதிகாரி உள்பட 28 பேர் பலி!; ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அதி... மேலும் பார்க்க

காஷ்மீர் தாக்குதல்: `இதுவரை 28 பேர் பலி' - தாக்குதலுக்கு பின்னணியில் யார்?

நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் தெற்கு காஷ்மீருக்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதுவரை வெளியான தகவலின் படி, இந்தத் துப்பாக்கி சூட்டில் கிட்டதட்ட 28 பேர் உ... மேலும் பார்க்க

திருமணம் செய்ய சொன்ன பெண் எஸ்.ஐ; துண்டு துண்டாக வெட்டி கடலில் வீசிய இன்ஸ்பெக்டர் - தண்டனை விவரங்கள்

மும்பை கல்யாண்-ல் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் அஸ்வினி. இவரை கடந்த 2016-ம் ஆண்டு தானே இன்ஸ்பெக்டர் அபய் குருந்தர் கடத்திச்சென்று படுகொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி கடலில் வீசிவிட்டதாக குற... மேலும் பார்க்க