`காஷ்மீர் தாக்குதலில் தமிழர்களுக்கும் பாதிப்பு; தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி காஷ்மீர் ச...
காதலிக்க மறுத்த மாணவி; கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்; பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.
அப்போது, நம்மிடம் பேசியவர்கள், "திண்டுக்கல் மாவட்டம் வண்ணார் விளாம்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 22), பி.காம் பட்டதாரி. இவர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த திருமுக்குளம்மேடு தெப்பம் பகுதியில் கல்லூரி பயிலும் மாணவி ஒருவர் அப்பகுதி வழியே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரைப் பின்தொடர்ந்த சூர்யா, பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் வைத்து கல்லூரி மாணவியை மடக்கிப் பேச முயன்றுள்ளார்.
அதற்குக் கல்லூரி மாணவி இடம் கொடுக்காமல் நகர்ந்து சென்றுள்ளார். இந்த நிலையில் தன்னுடன் பேச மறுத்து கல்லூரி மாணவி விலகிச் செல்வதைத் தாங்க முடியாத சூர்யா, தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயன்றுள்ளார்.

அதிர்ஷ்டவசமாகக் கத்தியின் கூர்முனை சூர்யாவை நோக்கியும், கத்தியின் பின்புற பகுதி கல்லூரி மாணவியின் கழுத்தையும் அழுத்தியிருந்ததால் கழுத்து அறுபடாமல் தப்பித்து விட்டார்.
இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட கல்லூரி மாணவி சூர்யாவின் கையை இறுகப்பிடித்துக் கொண்டு உதவிக்கேட்டுக் கத்தி கூச்சல் போட்டுள்ளார்.
இதனால் பதறிப்போன சூர்யா, தான் தப்பிக்கும் முயற்சியில் கல்லூரி மாணவியின் கைகளில் இரண்டு இடத்தில் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே அங்கு ஓடிவந்த சுற்றத்தினர், சூர்யாவைப் பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காயமடைந்த கல்லூரி மாணவி மீட்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பிடிபட்ட சூர்யாவிடம் போலீஸ் விசாரணை நடத்துகையில், "தனது உறவினர்கள் வீட்டுக்கு எதிரேதான் கல்லூரி மாணவி தங்கியிருந்து படித்து வந்தார். உறவினர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் கல்லூரி மாணவியிடம் பேசி பழகி வந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த பழக்கத்தில் கல்லூரி மாணவி மீது, சூர்யாவுக்கு ஈர்ப்பு உண்டாகி காதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவியை ஒரு தலையாகக் காதலித்து வந்த சூர்யா, மாணவியிடம் பலமுறை தனது காதலை வெளிப்படுத்தியும் அதனை மாணவி ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, பேசுவதைத் தவிர்த்து வந்த மாணவியை, மீண்டும் பழையபடி பேச வற்புறுத்திய நேரத்தில்தான் ஆத்திரத்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அவர்மீது வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சூர்யாவைக் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்" என்றனர்.
ஒருதலை காதலில், கல்லூரி மாணவியின் கழுத்தை இளைஞர் அறுக்க முயன்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs